கன்னியாகுமரி: ‘சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார்! அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது’ என சுவாமிதோப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அருகே உள்ள தெற்கு தாமரைக்குளத்தில் உள்ள தாமரைக்குளம் அய்யா வைகுண்டசுவாமி பதி (தாமரைபதி) கோவிலில் நடந்த அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா நிகழ்ச்சியில் கவர்னர் ஆன்.ரவி கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து, அங்கு அய்யாவழி ஆய்வு மையத்திற்கு கவர்னர் […]