திருநெல்வேலி: ரோடு ஷோ முதல் இருட்டுக்கடை அல்வா வரை… நெல்லையில் முதல்வர் ஸ்டாலின்… | Photo Album

திருநெல்வேலியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் கட்சிக் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ரோடு ஷோவில் மக்களைச் சந்தித்தார். புகழ் பெற்ற நெல்லை இருட்டு கடை அல்வா கடையில் பொதுமக்களுடன் அல்வாவும் ருசித்து மகிழ்ந்தார். திருநெல்வேலி..! ரோடு ஷோ முதல் இருட்டுக்கடை அல்வா வரை..! திருநெல்வேலியில் முதல்வர் ஸ்டாலின்.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், … Read more

பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின்விநியோகம்: அதிகாரிகளுக்கு வாரியம் உத்தரவு

பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சிபிஎஸ்இ, ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ, எஸ்எஸ்எல்சி, 12-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் இன்று (பிப்.7) தொடங்கி ஏப்.15-ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே, அனைத்து தேர்வு மையங்களிலும் நாள்தோறும் காலை 7 முதல் மாலை 5.30 வரை தடையற்ற … Read more

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் அனைத்து  சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி செல்லலாம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடிக்கடி சுங்கச் சாவடிகளை கடந்து சென்று வரும் உள்ளூர்மக்களின் வசதிக்காக மாத சலுகை கட்டணத்தில் ‘பாஸ்’ பெறும் வசதியும் உள்ளது. இதற்கிடையே, சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் … Read more

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசின் திறன் வளர்ப்பு பயிற்சி

சென்னை நேற்று தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு மாநில அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போரின் உரிமைகளை அங்கீகரிக்கும் பொருட்டு ஒன்றிய அரசால் பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போர் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006 இயற்றப்பட்டு பழங்குடியினர் குடியிருக்கும் வன நிலங்களுக்கு புவியியல் தரவின் அடிப்படையில், தனி நபர் உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் … Read more

மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான்

லக்னோ, உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா வரும் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில், மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான் இன்று பங்கேற்றார். அவர் சீத்தானந்த் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: பும்ராவின் நிலை குறித்து ரோகித் சர்மா விளக்கம்

நாக்பூர், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை … Read more

5,800 டன் நிவாரண பொருட்களுடன் எகிப்து சென்றடைந்த அமீரகத்தின் பிரமாண்ட சிறப்பு கப்பல்

துபாய், துபாய் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 5 ஆயிரத்து 800 டன் நிவாரண பொருட்கள் அடங்கிய பிரமாண்ட 6-வது சிறப்பு கப்பல் எகிப்து அல் அரீஷ் துறைமுகத்தை அடைந்துள்ளது. இதனை காசாவுக்கு எடுத்து சென்று விரைவாக பொதுமக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமீரக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் இஸ்ரேல் நாட்டின் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் … Read more

கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.6,374 கோடியில் சோலார் தொழிற்சாலைகள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ. 3,800 கோடி முதலீட்டில் டாடா குழுமத்தின் சோலார் தொழிற்சாலையில் உற்பத்தியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.2,574 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த 2 தொழிற்சாலைகள் மூலம் 6,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் வளாகத்தில் … Read more

இந்தியர்களுக்கு கைவிலங்கு: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கிடப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் இந்தியாவுக்கு 104 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். அமெரிக்க ராணுவ விமானத்தில் அழைத்து வரப்பட்ட அவர்களது கை, கால்களில் விலங்கிடப்பட்டு இருந்தது. இதை கண்டித்து, மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். மக்களவை சபாநாயகர் … Read more

“இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விதம் இந்தியாவிற்கும் இந்தியாவின் கண்ணியத்திற்கும் அவமானம்” : காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

“அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விதம் இந்தியாவிற்கும் இந்தியாவின் கண்ணியத்திற்கும் அவமானம்” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் இன்று (வியாழக்கிழமை) கூறினார். சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை திருப்பி அனுப்பும் செயல்முறையின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, 104 இந்தியர்கள் அமெரிக்க இராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டனர். விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பின்னரே சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டதாக புலம்பெயர்ந்தோர் குற்றம் சாட்டினர். … Read more