IND vs NZ: `வருண் ஒரு ரெட் டிராகன்' – ஸ்பின்னர்களை வைத்து சண்டை செய்த இந்தியா; சரிந்த நியூசிலாந்து

இந்தியா வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி துபாயில் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணியே முதலில் பேட் செய்து சுமாரான ஸ்கோரைத்தான் எடுத்தது. அந்த சுமாரான டார்கெட்டையும் எட்ட முடியாமல் இந்திய ஸ்பின்னர்களிடம் விக்கெட்டைக் கொடுத்து சரிந்து விழுந்திருக்கிறது நியூசிலாந்து. டாஸ் டாஸ் டாஸை நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர்தான் வென்றிருந்தார். ஆனாலும் முதலில் பேட்டிங் ஆட வேண்டும் என்பதைத்தான் தானுமே விரும்பியதாக ரோஹித் கூறினார். முதல் இரண்டு போட்டிகளிலும் டார்கெட்டை சேஸ் செய்தோம். … Read more

கொடைக்கானலில் சாரல் மழையில் நனைந்தபடி இயற்கை எழிலை ரசித்த சுற்றுலா பயணிகள் 

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் சாரல்மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் இயற்கை எழிலை ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. அதிக வெப்பம் காரணமாக வனப்பகுதியில் சில இடங்களில் தீபற்றியும் எரிந்தது. கோடை வெயிலின் தாக்கம் முன்னதாகவே துவங்கியது என்று எண்ணிய நிலையில், கடந்த இருதினங்களாக மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்யத்துவங்கி குளுமையான சூழல் நிலவியது. இன்று காலை முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்தது, இதன் காரணமாக எதிரே … Read more

மகாராஷ்டிரா யாத்திரையில் மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: போலீஸார் வழக்குப் பதிவு

மும்பை: மகாராஷ்டிராவின் ஜல்கானில் நடந்த சந்த் முக்தாய் யாத்திரையின் போது தனது மைனர் மகளும் அவரது தோழிகளும் சில ஆண்களால் துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரக்‌ஷா காட்சே ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.03) வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய காட்சே, “ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியின் போது, இந்தத் பகுதியில் சந்த் முக்தாய் … Read more

பெண்களுக்கு ரூ.2,500 மாதந்தோறும்… மார்ச் 8 மகளிர் தினத்தில் வருது நல்ல செய்தி!

2500 Rupees For Woman: பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

உ.பி. மகா கும்பமேளா: குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைந்த 50 ஆயிரம் பக்தர்கள் மகிழ்ச்சி

பிரயாக்ராஜ், உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற கூடிய மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கியது. இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்களின் வருகையை கவனத்தில் கொண்டு, 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த … Read more

மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் நாளை மோதல்

லக்னோ, 5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. அங்கு 6 போட்டிகள் நடைபெற்றது. 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூரில் கடந்த 21-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. அங்கு 8 போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஓய்வு நாளாகும். இதையடுத்து, இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் நாளை முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. நாளை லக்னோவில் நடைபெறும் … Read more

பொலிவியா: டிரைவரின் குடிபோதையால் விபத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்; 37 பேர் பலி

சுக்ரி, பொலிவியா நாட்டில் ஆருரோ பகுதியில் பெரிய திருவிழா கொண்டாட்டம் ஒன்று நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக சிலர் பஸ்களில் புறப்பட்டனர். அப்போது, அவற்றில் ஒரு பஸ் பொடோசி என்ற பகுதியில் வந்தபோது திடீரென விபத்தில் சிக்கியது. உயுனி மற்றும் கொல்சானி இடத்திற்கு இடையே சென்றபோது அந்த சுற்றுலா பஸ், எதிர்திசையில் உள்ள சாலைக்கு சென்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி பொடோசி காவல் துறையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, இந்த … Read more

Varun Chakaravarthy : “பதற்றமாக இருந்தேன்; ரோஹித்தான் தேற்றினார்.." – ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி

ஆட்டநாயகன்! சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்திய அணி சார்பில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். வெற்றிக்குப் பெரியளவில் உதவிய வருணுக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. வருண் சக்கரவர்த்தி – கோலி ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு வருண் சக்கரவர்த்தி பேசுகையில், “ஆரம்பத்தில் நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். இந்திய அணிக்காக நான் அவ்வளவாக ஓடிஐ ஆடியதில்லை. அதனால்தான் பதற்றம் அடைந்தேன். ரோஹித், ஹர்திக், … Read more

இஸ்லாமியர்களால் விஜய்க்கு அச்சுறுத்தலா? – விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுக்கு தவெக கண்டனம்

சென்னை: இஸ்லாமியர்களால் விஜய்க்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனை காரணம் காட்டி அவர் பாதுகாப்புப் பெற்றதாகவும் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியிருப்பதற்கு தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் எனக் காரணம் காட்டி தவெக தலைவர் பாதுகாப்புப் பெற்றதாக அபாண்டமான ஒரு பொய்யினைத் தொலைக்காட்சி ஊடக விவாதம் ஒன்றில் பேசியிருக்கும் வன்னியரசுக்கு தவெக சார்பில் … Read more

மணிப்பூர் சாலைகளில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் அமித் ஷா

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு மே முதல் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி, குக்கி இனத்தவர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது. அது இன்று வரை தொடர்கிறது. இந்த இன கலவரத்தால் பாதிக்கப்பட்டு 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு முதல்வராக இருந்த பிரேன் சிங் ராஜினாமா செய்தார். இதையடுத்து … Read more