‘ஸ்கைப்’ இணைய வழி அழைப்புச் சேவையை மூட மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு…

‘ஸ்கைப்’ இணைய வழி அழைப்புச் சேவையை மூட மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 2003 இல் தொடங்கப்பட்ட ஸ்கைப், அதன் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் 2000த்தின் தொடக்கத்தில் லேண்ட்லைன் தொலைபேசி சேவையை திணறடித்து கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட ஒரு வீட்டுப் பெயராக மாறியது என்றால் அது மிகையாகாது. ஆனால் சமீப ஆண்டுகளில் ஜூம் மற்றும் ஸ்லாக் போன்ற பயன்படுத்த எளிதான மற்றும் நம்பகமான போட்டியாளர்களுடன் போட்டியிட இந்த தளம் போராடிவருகிறது. ஏனெனில், ஸ்கைப்பின் அடிப்படை தொழில்நுட்பம் … Read more

மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் மார்ச் 5-ல் தொடக்கம்: அண்ணாமலை அறிவிப்பு

அவிநாசி: மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும். 1 கோடி கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பழங்கரையில் `வனத்துக்குள் திருப்பூர்’ அமைப்பின் 11-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘சூழலியல் மாற்றத்தில் தொழில்முனைவோர் பங்கு’ என்ற தலைப்பில் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மும்மொழிக் … Read more

பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழை இணைப்பது கட்டாயம்

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) சட்டம் கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாஸ்போர்ட் வழங்குதல், கல்வி நிறுவன சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருமண பதிவு, அரசு பணி நியமனம், ஆதார் எண் வழங்குதல் ஆகியவற்றுக்கு, ஒரு நபரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்துக்கு ஆதாரமாக … Read more

அதிபர் டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும்… அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர்

வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச தொலைகாட்சி மற்றும் ஊடகங்கள் முன் அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாட்டு அதிபர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். ரஷ்யா உடனான போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா ராணுவ தளவாடங்களை வழங்கி உதவி செய்த நிலையில் உக்ரைன் அதற்கான நன்றி விசுவாசத்தை காட்டவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் குற்றம்சாட்டினர். அமெரிக்க அதிபரின் விருந்தினராக அங்கு சென்ற ஜெலன்ஸ்கிக்கு வான்ஸ் குறிப்பிட்ட சில கடந்த கால … Read more

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க புதிய நிபந்தனை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தகவல்

திருச்சி: நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தி்ல், மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து மட்டும்தான் பேச வேண்டும். கல்வி, நிதி குறித்த பிரச்சினைகளை திமுக பேசக் கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நேற்று … Read more

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு மாவட்ட ரிசர்வ் போலீஸார் (டிஆர்ஜி), சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படையின் ஒரு பிரிவான கோப்ரா கமாண்டோ பிரிவினர் ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்கள், போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்குப் போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டனர். … Read more

முதல்வர் முக ஸ்டாலினுக்கு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு  பல தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருவதைய்டொட்டி பல்வேறு கட்சித் தலைவர்களும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் : “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் வழியில், கழகத்தை வழிநடத்தும் கழகத்தலைவர், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று, திராவிட மாடல் நல்லாட்சி நடத்துவதுடன் … Read more

டிரம்புடன் வெடித்த வார்த்தை போர்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட பதிவு

வாஷிங்டன், ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் … Read more

குமரி அந்தோணியார் ஆலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை அந்தோணியார் தேவாலய திருவிழாவில் சனிக்கிழமை அலங்கார பணிகளை மேற்கொண்டபோது உயரமான இரும்பு ஏணி உயரழுத்த மின்கம்பியில் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி 4 மீனவர்கள் உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காபட்டணம் பகுதியில் இனயம் புத்தன்துறை என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்குள்ள அந்தோணியார் தேவாலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நாளை (மார்ச் 2) நடைபெறவுள்ள நிலையில், தேர் செல்லும் பகுதிகளில் தேர் செல்ல தடையாக உள்ள … Read more