Month: April 2025
‘உலகத்தின் ஆக்கும் சக்திகள் தொழிலாளர்கள் தான்’ – ராமதாஸ், அன்புமணி மே தின வாழ்த்து!
சென்னை: மே தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராமதாஸ்: உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தவும், நினைவு கூறவும் ஏற்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. … Read more
பிரதமர் மோடியை சந்தித்து ஆர்எஸ்எஸ் தலைவர் ஆலோசனை
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தொடர்புடைய தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடனிருந்தார். பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து … Read more
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே.-பஞ்சாப் அணிகள் மோதல்..!
சென்னை; ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மேக் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண டிக்கெட் பெற்றவர்கள், அரசு பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம். நடப்பாண்டுக்கான ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெட்றறு வருகிறது. இது ஐபிஎல் 18வது சீசனாகும். முதல் போட்டி, கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more
செல்போனில் பேசியதை கண்டித்ததால் 11-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
மும்பை, மும்பையை அடுத்த தானே மான்பாடா பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் 11-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் இளம்பெண் சமிக்சா (20 வயது). இவர் நேற்று முன்தினம் இரவில் செல்போனில் வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அவரது மாமா, சமிக்சாவை கண்டித்துள்ளார். மேலும் அவரது கையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தூங்க செல்லுமாறு கூறினார். இந்த செயலால் சமிக்சா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். உடனே வீட்டின் … Read more
டெஸ்ட் கிரிக்கெட்; ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்த வங்காளதேசம்
சட்டோகிராம், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் … Read more
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்த பாகிஸ்தான்
லாகூர், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ … Read more
கும்பம்: `வழக்குகள் வேண்டாம்; என்ன காத்திருக்கிறது?' – ராகு கேது தரும் பலன்கள்
ஏப்ரல் 26 முதல் (வாக்கியப் பஞ்சாங்கப்படி) உங்கள் ராசியிலேயே அமர்கிறார் ராகு பகவான். கேது பகவான், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் நின்று பலன் தருகிறார். வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல சேதி வந்து சேரும். ராகு பகவான் தரும் பலன்கள் 1. ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார். ஓரளவு பிரச்னைகள் குறையும். இடம், பொருள் ஏவல் அறிந்து பேசும் வித்தையை கற்றுக்கொள்வீர்கள். சிலர், இடவசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் … Read more
ஏஐ, நவீன இயந்திரங்கள் வளர்ச்சியால் 8 மணி நேர வேலையை குறைக்க வலியுறுத்துவோம்: பெ.சண்முகம்
சென்னை: “உற்பத்தி பெருக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ரோபோ போன்ற நவீன இயந்திரங்களின் வளர்ச்சி காரணமாக 8 மணி நேரம் வேலை என்பதை குறைக்க ஒன்றிய பாஜக ஆட்சியை வலியுறுத்துவோம்.” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 8 மணி நேர வேலைக்காக போராடிய, ரத்தம் … Read more
பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் பாட்டில்களை பார்சலில் அனுப்பிய இந்திய ரசிகர்
புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீருக்கு தண்ணீர் பாட்டில்களை இந்திய ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் அளிக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நடிகை ஹனியா … Read more