பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க முழு ஆதரவு: இங்கிலாந்து அரசு அறிவிப்பு

லண்டன்: பஹல்காம் தீவிரவாதிகள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து முழு ஆதரவு அளிக்கும் என்றும், அதே நேரத்தில் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கவும் இங்கிலாந்து உதவும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹமீஸ் ஃபல்கனர் பேசியதாவது: பஹல்காம் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு, இங்கிலாந்தின் முழு ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் … Read more

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க தனி  இணையதளம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க உதவுவதற்காக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப் பக்கம் தொடங்கப்படும். தமிழ் இணைய கல்விக் கழகம் மூலம் இணையப் பக்கம் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் திமுக எம்எல்ஏ,  மயிலை வேலு இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு: முக்கிய கேள்விகளுக்கு விடையில்லை – ராகுல் காந்தி

புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது:- சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும்படி பலமுறை பாஜக அரசிடம் நாங்கள் கேட்டுள்ளோம். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்திய அரசு தற்போது பணிந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் நடத்தி காட்டுவோம் என நாடாளுமன்றத்தில் கூறியிருந்தோம். 11 ஆண்டுகளுக்கு பின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய … Read more

இஸ்ரேலின் மொசாட்டிற்கு உளவு பார்த்ததாக கூறி இளைஞருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஈரான்

தெஹ்ரான், ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல், இஸ்ரேலுக்கு எதிரான ஈரானும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனிடையே, கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் ஈரான் புரட்சிப்படையின் முக்கிய தளபதி சயது ஹடாய் தெஹ்ரானில் சுட்டுக்கொல்லப்பட்டார். பைக்கில் வந்த 2 பேர் சயதை சுட்டுக்கொன்று விட்டு தப்பிச்சென்றனர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியது. இந்த சம்பவம் … Read more

மீனம்: `பணம் வரும் வழி இதுதான்' – ராகு கேது தரும் பலன்கள்

ஏப்ரல் 26 முதல் (வாக்கியப் பஞ்சாங்கப்படி) உங்கள் ராசியிலிருந்து விலகி, 12-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் ராகு பகவான். அதேபோல், கேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் நின்று பலன் தரப்போகிறார். இந்த ராகு- கேது பெயர்ச்சிக் காலத்தில், பிணிப்பாதிப்புகள் விலகி, தேகம் பொலிவு பெறும்; சந்தோஷம் மலரும். ராகு பகவான் தரும் பலன்கள் 1. ராகு பகவான் உங்கள் ராசியிலிருந்து விலகுவதால், இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் … Read more

‘பாமகவின் 30+ ஆண்டுகள் முயற்சியின் பலன்’ – சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

சென்னை: “சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும். அதன் மூலம் அனைவருக்கும் முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில் மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்பு மேலோட்டமான ஒன்றாகத் தான் இருக்கும். எனவே, தமிழக அரசு மக்களின் சாதி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய தனியாக சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்,” என்று பாமக நிறுவனர், தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். … Read more

இந்திய எல்லை பகுதிகளில் படைகள் குவிப்பு: பாகிஸ்தானில் பதற்றம் அதிகரிப்பு

புதுடெல்லி: பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தியது. இதனிடையே, இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு உளவுத் துறைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more

36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்

இஸ்லாமாபாத்: அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் இந்தியா தாக்குதல் நடத்தவிருப்பதாக நம்பகமான உளவுத்துறை தகவல் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். அவ்வாறு, இந்தியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும், இந்தியா விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த … Read more

கோடையை முன்னிட்டு கோவை – ஜார்க்கண்ட் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

கோவை தெற்கு ரயில்வே கோடை  காலத்தை முன்னிட்டு கோவை – ஜார்க்கண்ட் சிறப்பு  ரயில் இயக்கபடுவதாக அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கோவை – ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் செல்லும் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06063) வருகிற மே மாதம் 02, 09, 16 மற்றும் 23, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த யில் கோவையில் இருந்து (வெள்ளிக்கிழமை) காலை 11.50 மணியில் புறப்படும். மறுமார்க்கத்தில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்- … Read more

CSK vs PBKS: 'CSK செய்த 3 தவறுகள்!' – என்னென்ன தெரியுமா?

‘சென்னை vs பஞ்சாப்!’ சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக சென்னை அணிக்கு ப்ளே ஆப்ஸ் செல்ல 1% வாய்ப்பு இருந்தது. இந்தப் போட்டியிலும் வெற்றிகரமாக தோற்று சென்னை அணி அந்த வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறது. சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன? தோனி முறையாக ஃபினிஷ் ஆகாத பேட்டிங்! கடந்த போட்டிகளைவிட இந்தப் போட்டியில் சென்னையின் பேட்டிங் நன்றாகவே இருந்தது. சாம் கரண் … Read more