`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' – மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனுார் அக்னீஸ்வரர் கோயிலில், ராஜகோபுரம், சுற்றுச்சுவர் திருப்பணிகள் முடிந்துள்ளது. பிரகாரங்கள் மற்றும் விமானங்கள் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் அரிசி உள்ளிட்டவை வழங்கப்படுவது போல், அம்மன் கோயில் விழாக்களுக்கும் அரசு சார்பில், அரிசி உள்ளிட்டவை வழங்க … Read more

‘எம்புரான்’ படக் காட்சிகளை நீக்க வைகோ, சீமான் வலியுறுத்தல்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் காட்சிகளை ‘எம்புரான்’ திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என வைகோ, சீமான் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான ‘எம்புரான்’ திரைப்படத்தில் நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணை கேரளாவை காவு வாங்க காத்திருப்பதாகவும் வசனம் இடம்பெற்றுள்ளது. முல்லைப் பெரியாறு அணையால் கேரள மக்களுக்கு ஆபத்து என்பதுபோல் திட்டமிட்டு வசனங்கள் திணிக்கப்பட்டிருப்பது கடும் … Read more

மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்: அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

புதுடெல்லி: வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக பேசிய கிரண் ரிஜிஜு, “நாளை (ஏப்.2), வக்பு சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவருகிறோம். அதற்காக விவாதத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் மக்களவை ஆலோசனைக் குழு கூட்டத்தில் முன் முன்மொழிந்தேன். விவாதத்துக்கான மொத்த நேரம் எட்டு மணிநேரமாக … Read more

மகளின் ஆசிரியை விரித்த வலை… தொக்காக சிக்கிய தந்தை – கடைசியில் பெரிய ட்விஸ்ட்

Crime News In Tamil: தனது மாணவியின் தந்தையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்து, அதை வைத்தே அவரிடம் மிரட்டி லட்சக்கணக்கில் பணத்தை பறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். 

இரண்டு நாட்களில் இத்தனை பாடல்களா? இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யம்!

இசைஞானி இளையராஜா தனியார் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். 

22 ஆண்டுகால பகையும்… 21 கொலைகளும்… தலைமுறைகளை தாண்டிய வன்மம் – முழு பின்னணி!

Crime News In Tamil: மதுரையில் நேற்றிரவு நடந்த என்கவுண்டரில் சுபாஷ் சந்திர போஸ் என்ற ரவுடி உயிரிழந்தார். இவருக்கு பின் இருக்கும் 22 ஆண்டுகால பகையும், இந்த காலகட்டங்களில் நடந்த 21 கொலைகள் குறித்து இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

பஞ்சாப்புக்கு ஈசி வின்.. ஹோம் கிரவுண்டில் தோற்ற லக்னோ!

18வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (ஏப்ரல் 01) 13வது லீக் ஆட்டம் லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த நிலையில், முதலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. … Read more

சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கோடா ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ள லால்மதியா நிலக்கரி சுரங்கங்களை மேற்கு வங்காளத்தில் உள்ள ஃபராக்கா அனல் மின் நிலையத்துடன் இணைக்கும் ரயில் பாதை மெர்ரி-கோ-ரவுண்ட்.  இந்த ரயில் பாதை  NTPC ஆல் நிர்வகிக்கப்படுகிறது. இந்த பாதையில் இன்று(ஏப்ரல்.01) அதிகாலை 3  மணியளிவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியது.   இந்த விபத்தில் 2 லோகோ … Read more

'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும் கார்த்தி சிதம்பரம்

சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்புகளும், வேலைகளும் உருவாகின்றன. தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மொழி சர்ச்சையை கிளப்புகிறவர்கள் அவர்களுடைய அரசியல் நோக்கங்களை அடையலாம். ஆனால், அவர்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்” என்று பேசியிருந்தார். ‘நான் முழு நேர அரசியல்வாதி அல்ல!’ – யோகி ஆதித்யநாத் கார்த்தி சிதம்பரம்தரவுகளை கொடுக்க முடியுமா? இதற்கு பதிலளிக்கும் விதமாக, மக்களவை … Read more

ராமேசுவரம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: மீனவர் காங்கிரஸ் அறிவிப்பு

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது குறித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ வெளியிடுள்ள அறிக்கையில், “கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2025 தற்போதைய மார்ச் … Read more