காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றியமைப்பு

டெல்லி காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக தேசிய பாதுகப்பு ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது/ பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடத்திய கோர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இன்று முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய … Read more

தாய்லாந்திலிருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்; இந்திய ஹாக்கி அணி முன்னாள் வீரர் சிக்கியது எப்படி?

மும்பை பேலாப்பூரில் கடந்த வாரம் பில்டர் குருநாத் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது மகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் வழக்கிற்காக தன்னை போலீஸார் அடிக்கடி விசாரணைக்கு அழைத்துச் சித்ரவதை செய்வதாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து போதைப்பொருள் தொடர்பாக நவிமும்பை போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதில் நவிமும்பை நெரூல் பகுதியில் வீட்டு மாடியில் போதைப்பொருள் பரிவர்த்தனை நடக்க இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கஞ்சா இதையடுத்து போலீஸார் அங்கு ரெய்டு … Read more

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல அனுமதி – எல்.முருகன் நன்றி

சென்னை: தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக ஊடக எக்ஸ் தள பக்கத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், “திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தினமும் சுமார் 2 … Read more

பதற்றம் அதிகரிப்பு எதிரொலி: இந்தியாவை விட்டு வெளியேறும் பாகிஸ்தானியர்கள்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதால், அட்டாரி – வாகா எல்லை வழியாக 786 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுக்கு பதலடி கொடுக்க முடிவெடுத்துள்ள மத்திய அரசு, இவ்விஷயத்தில் ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை வழங்கி உள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் ராணுவம் தனது பதிலடி நடவடிக்கையை தொடங்கலாம் என கூறப்படுகிறது. இந்தியா அடுத்த 24-36 மணி நேரத்தில் ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக “நம்பகமான உளவுத்துறை” … Read more

csk vs pbks: 'அடுத்த போட்டிக்கே வருவேனா எனத் தெரியாது' – ஓய்வு குறித்து பேசுகிறாரா தோனி?

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 49வது லீக் ஆட்டம் தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் எம். எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது.  இப்போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு வீசப்பட்டது. டாஸை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வென்றார். அவர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் பேசி முடித்ததும், டேனி மோரிசன், தோனியை … Read more

15 Years of Sura: ''சுறாவைத் தோல்வி படமாகச் சித்தரித்த நபர்; காரணம்…" – எஸ்.பி ராஜ்குமார் பேட்டி

விஜய்யின் 50-வது படமான ‘சுறா’ ரிலீஸாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது. விஜய்யின் 50-வது படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை எகிறவைத்த ‘சுறா’ எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை என்று சொல்லப்பட்டுகிறது. இந்தநிலையில், ‘சுறா’ படத்தின் இயக்குநர் எஸ்.பி ராஜ்குமாரிடம் பேசினேன். “சுறா படத்தை இத்தனை வருடங்களாகியும் ரசிகர்கள் நினைவுப்படுத்துவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் வாழ்க்கைல மறக்க முடியாத முக்கியமான படம் ‘சுறா’. விஜய் சார் மாதிரியான ஒரு முன்னணி நடிகர், அதுவும் தன்னோட 50-வது படத்தை … Read more

கர்நாடக முதல்வர் பாகிஸ்தானுக்கு எதிராக அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா பாகிஸ்தானுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 27ம் தேதி உகர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் ள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியில், அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மைதானத்தில் ஒருநபர் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பினார். ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் அந்த நபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். க ற்கள், கட்டைகளை கொண்டு அந்த நபரை சரமாரியாக அடித்தனர். இதில் அந்த நபர் … Read more

திருமணம் மீறிய உறவு; 5 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நண்பரோடு கைதான இளைஞர்; பின்னணி என்ன?

திருச்சி, ஏர்போர்ட் வசந்த நகரைச் சேர்ந்தவர் நாசர் அலி (வயது: 30). இவர், கே.கே நகர்ப் பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு 5 வயதில் மகன் உள்ளார்.  இந்நிலையில், நாசர் அலி தன்னுடைய நண்பர் வேலுமணி என்பவருடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் ஐந்து வயது மகனைத் தனியாக திருவெறும்பூர் அருகே அழைத்துச் சென்று அந்த சிறுவனுக்குக் கட்டாயப்படுத்தி வாயில் மது … Read more

பாதுகாப்பான ரயில் பயணத்துக்கு ரயில்வே கேட்களில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

மதுரை: பாதுகாப்பான ரயில் பயணத்துக்காக, திண்டுக்கல் அருகே ரயில்வே கேட்களில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் அருகிலுள்ள தாமரைப்பாடி – வடமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே இரண்டு ரயில்வே கேட்டுகள் செயல்படுகின்றன. இதுவரையிலும் ரயில்களுக்கான கைகாட்டி (சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்கு சைகை/சிக்னல் கம்பம்) வழிகாட்டுதலின்றி செயல்பட்டன. அருகிலுள்ள ரயில் நிலைய அதிகாரி வழிகாட்டுதலில் பாதுகாப்பாக கேட்டுகள் … Read more

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், எஸ். ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக … Read more