ஐ.பி.எல். தகுதி சுற்று 1: பஞ்சாப் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

முல்லான்பூர்,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே பெங்களூருவின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை தாரை வார்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் 4 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களிலும், நேஹல் வதேரா 8 ரன்களிலும் சீரான இடைவெளியில் அவுட்டாகினார்.

நடப்பு சீசனில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் மிக முக்கியான இந்த ஆட்டத்தில் மொத்தமாக சொதப்பினர். அடுத்து வந்த ஷசாங்க் சிங் (3 ரன்கள்), முஷீர் கான் டக் அவுட் ஆகியும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.

தற்போது வரை பஞ்சாப் அணி 10 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்களுடன் தடுமாறி வருகிறது. ஸ்டோய்னிஸ் 26 ரன்களுடனும், ஓமர்சாய் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பெங்களூரு தரப்பில், யாஷ் தயாள் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.