திருப்பூர்: தலை நசுக்கப்பட்டு இளம்பெண் படுகொலை; தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் குடியிருப்பில் உள்ள காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பெண்ணின் தலை மற்றும் கைகளில் கற்களால் அடித்து நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பெண்ணைக் கொலை செய்யப் பயன்படுத்திய கல் உள்ளிட்டவற்றில் பதிவான … Read more

குறைந்தபட்ச கூலிக்கான அரசாணையை அமல்படுத்தக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம் @ புதுச்சேரி

புதுச்சேரி: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான குறைந்தப்பட்ச கூலி தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி புதுச்சேரியில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுவை தூய்மைப் பணியாளர் சங்கத்தின் சார்பாக மே தினம் கொண்டாடப்பட்டது. புதுவை கம்பன் கலை அரங்கில் தூய்மைப் பணியாளர்களை ஒருங்கிணைத்து இனிப்புகள் வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோல் நெல்லித்தோப்பு, பவழநகர், இந்திராகாந்தி சிலை, அண்ணா சாலை பகுதிகளில் தொழிலாளர்களை ஆங்காங்கு ஒன்று திரட்டி இனிப்புகள் வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, சுமதி, … Read more

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரி பொதுநல மனு – உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரும் பொதுநல மனுவை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சார்பில் வழக்கறிஞர் ஹதேஷ் குமார் சாஹு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு நீதிபதிகள் … Read more

சூர்யாவின் சம்பவமா..சூர்யாவுக்கு சம்பவமா? ரெட்ரோ படம் எப்படி? X தள விமர்சனம்!

Retro Movie X Review Tamil Latest :  சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் X தள விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.  

விராட் கோலி விரும்பிக் கேட்கும் தமிழ் பாடல் என்ன தெரியுமா? கேட்டா ஷாக் ஆவீங்க!

IPL 2025 Virat Kohli: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரால் யார் அதிக சோகத்தில் இருக்கிறார்கள் என்று கேட்டால் நிச்சயம் அனைவரும் சிஎஸ்கேவையும், அதன் ரசிகர்களையும் கைகாட்டிவிடுவார்கள். Virat Kohli: உச்சக்கட்ட மகிழ்ச்சியில் விராட் கோலி அதேபோல், நடப்பு ஐபிஎல் தொடரால் யார் அதிக மகிழ்ச்சியில் இருப்பார்கள் என்று கேட்டால் அது ஆர்சிபியும், அதன் ரசிகர்களும்தான் என்பதிலும் சந்தேகம் இருக்கப்போவதில்லை. ஆனால், அவர்கள் அனைவரையும் விட உச்சக்கட்ட மகிழ்ச்சியில் … Read more

Retro Review: காதலுக்காக கத்தியைக் கீழே போடும் அதே `ரெட்ரோ' தமிழ் சினிமா டெம்ப்ளேட்; க்ளிக்காகிறதா?

தனது காதலி ருக்மணி (பூஜா ஹெக்டே) மீது கொண்ட காதலால் தனது கோபத்தையும், ரவுடித்தனத்தையும் விட்டுவிட்டு அவரைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் பாரிவேல் கண்ணன் (சூர்யா). இதனிடையே, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆப்பிரிக்காவுக்குக் கடத்தப்பட்ட ஒரு பொருள் (‘கோல்ட் ஃபிஷ்’) காணாமல் போனதாகத் தகவல் வருகிறது. இதைத் தேடி, பாரியின் வளர்ப்புத் தந்தையான ஜோஜு ஜார்ஜ், திருமண விழாவுக்கு வருகிறார். அங்கு நடக்கும் மோதலில் பாரி மீண்டும் கத்தியைக் கையில் எடுக்க, ருக்மணி அவரை விட்டுப் பிரிகிறார். … Read more

அமேசான் வழங்கும் சம்மர் ஆஃபர்… ஏசி முதல் டிவி வரை… பாதி விலையில் வாங்கலாம்

அமேசானின் கிரேட் சம்மர் சேல் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இந்த சலுகை விற்பனையில், மின்னணு பொருட்களுக்கு, குறிப்பாக ஏசி, குளிர்சாதன பெட்டி, டிவி மற்றும் கூலர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில், வாடிக்கையாளர்கள் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை 75% வரை தள்ளுபடியில் வாங்கலாம். ஹேயர், லாயிட் மற்றும் சாம்சங் போன்ற பிரபல நிறுவனங்களின் ஏசிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் சிறந்த சலுகைகள் … Read more

இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புப் பொதுத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வுகள் நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் … Read more

கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் என்ன?

அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அதாவது மே 4-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை உள்ளது. அதற்குள்ளேயே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், ‘பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்படுகிறதா?’ என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இப்போது திருச்சி மாவட்டத்தில் கிட்டதட்ட 104 டிகிரி வந்துவிட்டது. இப்போதைக்குப் பள்ளி திறப்பு ஜூன் 2-ம் தேதி என்று அறிவித்து உள்ளோம். கோடை வெயில் அந்த சமயத்தில் … Read more

கோவையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி மே 6-ல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 6-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் 3,935 காலிப் பணியிடங்களுக்கு ஆட்தேர்வு செய்யப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி கொண்ட மனுதாரர்கள் … Read more