மதுரையில் மு.க.அழகிரியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

மதுரை: மதுரையில் தன் அண்ணன் மு.க.அழகிரியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். மதுரையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். இதன்பின், மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் அருகிலுள்ள மதுரா கோட்ஸ் மேம்பாலம் வரையிலும் ஏற்பாடு செய்திருந்த ரோடு ஷோவில் பங்கேற்று மதுரா கோட்ஸ் பாலம் அருகே புதுப்பிக்கப்பட்ட முன்னாள் மதுரை மேயர் முத்துவின் வெண்கல சிலையை திறந்து வைத்து மரியாதை … Read more

ஆபரேஷன் சிந்தூர்: இழப்பை சந்தித்த பின் விமானப் படை உத்தியை மாற்றியதாக முப்படை தலைமை தளபதி தகவல்

சிங்கப்பூர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ஆரம்பத்தில் இந்திய விமானப்படை இழப்புகளை சந்தித்ததாகவும், பிறகு தனது உத்திகளை மாற்றிக்கொண்டதாகவும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு தொடர்பான ஷாங்க்ரி-லா மன்றத்தில் பங்கேற்ற பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான், பின்னர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இதைத் தெரிவித்துள்ளார். அதன் விவரம்: இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுடனான மோதலின் முதல் நாளில் இந்தியா வான்வழி இழப்புகளை சந்தித்தது. பிறகு இந்தியா தனது … Read more

உலக அழகிப் பட்டம் வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா! | Miss World 2025

ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகி அழகி இறுதிப் போட்டியில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 72-வது மிஸ் வேர்ல்டாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் உலக அழகி 2025-ம் ஆண்டுக்கான போட்டி நடைபெற்றது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். மே 10-ம் தேதி தொடங்கிய இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் மார்டினிக், எத்தியோப்பியா மற்றும் போலந்து நாடுகளைச் … Read more

அரசின் பெண்களுக்கான இலவச பேருந்தில் 700 கோடி பயணங்கள்!

சென்னை: தமிழ்நாடு அரசு பெண்களுக்காக மாநிலம் முழுவதும் இயக்கி வரும் அரசு இலவச  பேருந்துகளில் இதுவரை 700 கோடி பயணங்கள் நடைபெற்றுள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், பெண்களை கவரும் வகையில்,  பிங்க் கலர் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டு, அதில் பெண்கள் இலவசமாக பயணிக்க கூறியது. இதற்கு மகளிர் விடியல் பயணம் என்று கூறியது. இந்த ‘மகளிர் விடியல் பயணத் திட்டத்தில்  தமிழகம் முழுவதும்  700 கோடி பயணங்கள் நடைபெற்றுள்ளதாக என … Read more

5 வடகிழக்கு மாநிலங்களில் கனமழை, வெள்ளம்; 19 பேர் பலி

கவுகாத்தி, நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்படி அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் வெள்ளம் வழிந்தோடுகிறது. வருகிற நாட்களில் கூடுதலாக மழை பெய்ய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. கனமழை, வெள்ளம் ஆகியவற்றால் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி … Read more

பாகிஸ்தான்: பலூசிஸ்தான் மக்கள் 5 பேர் படுகொலை; சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை

கெச், பாகிஸ்தானின் ஆட்சிக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில், வெவ்வேறு இடங்களில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம் என பலூச் தேசிய இயக்கத்தின் மனித உரிமைகள் அமைப்பான பாங் தெரிவித்து உள்ளது. அவர்கள் கெச் மற்றும் ஆவாரன் மாவட்டங்களில் சட்டவிரோத வகையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் யாசிர் என்ற தினக்கூலி வேலையில் ஈடுபட்டு வந்தவரை ராணுவ ஆதரவு பெற்ற படையினர் சுட்டு கொன்றனர். இதனை தொடர்ந்து, தர்மன் பலூச் என்பவர் … Read more

CSK: "அவருடைய வழிகாட்டுதலில் வளர விரும்புகிறேன்" – தோனி குறித்து உர்வில் படேல் உருக்கம்!

அமைதி, தலைமைத்துவம் மற்றும் பணிவைக் கற்றுக்கொடுக்கும் ஒரு மாஸ்டர்கிளாஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2025 IPL சீசன் சிறப்பானதாக அமையவில்லை என்றாலும், இளைஞர்கள் – அனுபவமிக்க விரர்களின் பிணைப்பையும் அதன் இன்றியமையாமையையும் வெளிப்படையாகக் காட்டும் சீசனாக அமைந்தது. வீரர்களின் ஃபார்ம், காயம், கேப்டன்சி மாற்றம் எனச் சில சிக்கல்களைச் சந்தித்தது சி.எஸ்.கே. இதனால் உர்வில் படேல், ஆயுஷ் மாத்ரெ, ஷேக் ரஷீத், ப்ரெவிஸ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. CSK இந்த சீசனில் அறிமுகமான … Read more

மதுரையில் 22 கி.மீ தூரம் முதல்வர் ஸ்டாலின் ‘ரோடு ஷோ’: வழிநெடுகிலும் மக்கள் திரண்டு வரவேற்பு

மதுரை: மதுரையில் 22 கி.மீ தூரம் ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இரு பக்கத்திலும் திரண்டு நின்று மக்கள் வரவேற்பு அளித்தனர். முதல்வர் ‘ரோடு ஷோ’ – மதுரையில் உத்தங்குடியில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 31) மதியம் மதுரை வந்தார். பின்னர் விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மாலை … Read more

வேலைக்கு நிலம் லஞ்சம் வழக்கு: விசாரணையை நிறுத்தக் கோரிய லாலு பிரசாத்தின் மனு தள்ளுபடி

புது டெல்லி: ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிபிஐ விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கக் கோரிய முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கின் குற்றச்சாட்டு பரிசீலனை கட்டத்தில், லாலு பிரசாத் யாதவ் விசாரணை நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைக்க முழு சுதந்திரம் இருப்பதாக நீதிபதி ரவீந்தர் துதேஜா தீர்ப்பளித்தார். மேலும், வழக்கின் விசாரணையை நிறுத்துவதற்கு எந்த … Read more

ஜூன் 1 முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் தெரியுமா?

புதுடெல்லி: நாளை (ஜூன் 1, 2025) முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் வெளியாகி உள்ளது அது குறித்து விரிவாக பார்ப்போம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் … Read more