கேரன்ஸை விட பிரீமியம் வசதிகளுடன் கியா கிளாவிஸ் வெளியாகிறதா..! | Automobile Tamilan

கேரன்ஸ் எம்பிவி காரிலிருந்து பிரீமியம் வசதிகளை கொண்ட கியா நிறுவனத்தின் புதிய கிளாவிஸ் எம்பிவி மே 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு அனேகமாக நடப்பு மே மாத இறுதியில் விலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் கியா வெளியிட்டிருந்த சிரோஸ் எப்படி 4 மீட்டருக்கு குறைவான எஸ்யூவி சந்தையில் சொனெட்டை விட மாறுபட்டதாக அமைந்திருக்கின்றதை போலவே கிளாவிஸ் எம்பிவி சற்று மாறுபட்ட வசதிகளுடன் அனேகமாக ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கலாம். எஞ்சின் ஆப்ஷனில் … Read more

அதிமுக-பாஜக வாக்குகளை பிரிக்க விஜய் மூலம் சதி: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: அ​தி​முக -பாஜக கூட்​டணி வாக்​கு​களை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்​கிறது என்று இந்து மக்கள் கட்​சித் தலை​வர் அர்​ஜுன் சம்​பத் கூறி​னார். தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்டை வளவன்​புரத்​தில் வராஹி அம்​மன் கோயி​லில் இந்து மக்​கள் கட்சி சார்​பில் நேற்று நடை​பெற்ற சத்​ரு சம்​ஹார யாகத்​தில் கலந்​து​கொண்ட அர்​ஜுன் சம்​பத், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பயங்​கர​வாதத்தை வளர்க்​கும் பாகிஸ்​தான் மற்​றும் பயங்​கர​வாதம் அழிய​வும், நமது நாட்​டின் ராணுவம் வலிமை பெற​வும், யுத்​த​த்தில் வெற்றி பெற​வும் … Read more

உத்தராகண்டில் கேதார்நாத் கோயிலில் நடை திறப்பு

டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதை அடுத்து புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் நேற்று பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. உத்தராகண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர். இது சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இமயமலையில் அமைந்துள்ள இக்கோயில்கள் கோடையில் 6 மாதங்கள் மட்டும் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும். இந்நிலையில் உத்தராண்டில் வருடாந்திர சார்தாம் யாத்திரை கடந்த புதன்கிழமை தொடங்கியது. அன்று கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்கள் … Read more

Retro: "கனிமா பாட்டு செம மொக்கையா இருந்தது" – ஓப்பனாக பேசிய சந்தோஷ் நாராயணன்; ஷாக் ஆன சூர்யா!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் கண்ணாடிப் பூவே, கனிமா, தி ஒன் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ரெட்ரோ திரைப்படத்துக்கான புரொமோஷனின் ஒரு பகுதியாக கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, சந்தோஷ் நாராயணன் உரையாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இதில் கனிமா பாடல் உருவாக்கம் குறித்துப் பேசியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். கனிமா பாடலை ஷூட் செய்யும்போது பாடல் கேவலமாக இருந்தது என்று அவர் கூறியதும் அதற்கு … Read more

விசாகபட்டினம்,  சிம்மாசலம், ஸ்ரீலக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள் ஆலயம்

விசாகபட்டினம்,  சிம்மாசலம், ஸ்ரீலக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள் ஆலயம் இந்த கோயில் விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது…! மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் எற வேண்டும்…! விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனைக் கொல்ல இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப்போன நிலையில்… பிரகலாதனைக் கடலில் வீச ஆணையிட்டான். ஆனால், அவ்வாறு வீசும்போது விஷ்ணு அந்த … Read more

யோகாவில் ஆந்திரா உலக சாதனை படைக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

அமராவதி, ஆந்திர பிரதேச மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பேசினார். அவர் அமராவதியில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, ஆந்திரா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் வளர்ச்சிக்கான சரியான வேகத்தில் செல்கிறது என்றும் நம்பிக்கை வெளியிட்டார். அவர் தொடர்ந்து பேசும்போது, நாட்டின் முக்கிய நிகழ்ச்சியான ஜூன் 21-ஐ சர்வதேச யோகா நாளாக கடைப்பிடிக்க அழைப்பு விடுத்த ஆந்திர பிரதேசத்தின் … Read more

சி.எஸ்.கே போல ராஜஸ்தானும் இந்த தவறை செய்துவிட்டது – ஆஸி. முன்னாள் வீரர் விமர்சனம்

மும்பை, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், சி.எஸ்.கே. மெகா ஏலத்தில் தவறு செய்தது போல ராஜஸ்தானும் தவறு செய்ததே அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் … Read more

பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு – பாகிஸ்தான் முன்னாள் மந்திரி பேட்டி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப், சமீபத்தில் அளித்த பேட்டியில், பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருந்தது என்றும், நிதி உதவி அளித்தது உண்மை என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தநிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ (35) அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாகிஸ்தான் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து இருந்தது என்பதில் ரகசியம் எதுவும் கிடையாது. அந்த தொடர்பின் காரணமாக பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்படி பாதிக்கப்பட்டதால் நாங்கள் … Read more

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் எக்ஸ்குளூசிவ் எடிசன் சிறப்புகள் | Automobile Tamilan

விற்பனையில் உள்ள ZX(O) வேரியண்ட்டை விட ரூ.1.24 லட்சம் விலை அதிகரிக்கப்பட்டு ரூ.32.58 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இன்னோவா ஹைகிராஸ் எக்ஸ்குளூசிவ் எடிசனை டூயல் டோன் கொண்டதாக டொயோட்டா வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய எக்ஸ்குளூசிவ் எடிசன் சிறப்புகள்..! மே முதல் ஜூலை 2025 வரை மட்டும் கிடைக்க உள்ளது. வெள்ளை நிறத்தில் சூப்பர் வெள்ளை, பேரல் வெள்ளை இரு நிறங்களுடன் மேற்கூறை கருப்பு நிறத்தை பெற்றதாக அமைந்துள்ளது. கிரில், கார்னிஷ், வீல் ஆர்ச் உட்பட ஒரு சில … Read more

சாதி சான்றிதழ்கள் விவகாரத்தில் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முழுமையான விசாரணைக்குப்பிறகே சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி சாதிச் சான்றிதழ்கள் அளித்து வேலைவாய்ப்பு பெற்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக்கோரி பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு … Read more