ஐபிஎல் 2025: சிஎஸ்கே, ஆர்சிபி போட்டியில் வெற்றிபெறப்போகும் அணி இதுதான் – ஹர்பஜன் சிங் கணிப்பு

Harbhajan Singhs Prediction on CSK vs RCB Match : இன்று ஐபிஎல்லின் 52வது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இதற்கு முன்பு இரு அணிகளும் சேப்பாக்கத்தில் ஒருமுறை மோதியுள்ளன. அந்த போட்டியில் சிஎஸ்கேவை ஆர்சிபி தோற்கடித்தது. அத்துடன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியது. அதன்பிறகு நடந்த போட்டிகளில் சந்தித்த தொடர் தோல்விகளால் பிளேஆஃப் … Read more

`ஸ்கிரிப்டை படித்த பா.ரஞ்சித், நானே..!’ – திரைப்படமாகும் பெருமாள் முருகனின் 'கூளமாதாரி' நாவல்

எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘கூளமாதாரி’ நாவல் திரைப்படமாக உருவெடுக்கிறது. அவரது முக்கியமான நாவலான கூளமாதாரி சினிமாவாக மாற்றம் பெறுவது பற்றி பெருமாள் முருகனிடம் பேசினோம். பா.ரஞ்சித் என்னுடைய தேர்வு அதுதான் “என்னுடைய ‘கூளமாதாரி’ நாவலை பற்றி இயக்குநர் பா.இரஞ்சித் பல மேடைகளில் மிகவும் பாராட்டிப் பேசியிருக்கிறார். ஒரு நாவலை படமாக எடுக்க வேண்டும் என்றால் என்னுடைய தேர்வு அதுதான். நான் அந்த நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருக்கிறேன் என்றும் அவர் சொன்னார். இப்படி இருக்கும்போது … Read more

வேளாண்மையில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி கவுரவித்த முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருது மற்றும் 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று வேளாண்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருதினை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 2) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை … Read more

பவன் கல்யாணுக்கு சாக்லேட்… பிரதமர் மோடி செயலால் மேடையில் சிரிப்பலை

அமராவதி, ஆந்திர பிரதேச துணை முதல்-மந்திரி பவன் கல்யாணுக்கு பிரதமர் மோடி அன்பின் வெளிப்பாடாக சாக்லேட் கொடுத்துள்ளார். அதனை புன்னகையுடன் பவன் கல்யாண் பெற்று கொண்டார். இந்த தருணத்தில் பிரதமர் மோடி, அவருடன் மேடையில் அமர்ந்திருந்த முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பலத்த சிரிப்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வுக்கு முன்பு, பவன் கல்யாண் அமராவதியில் நடந்த பொது கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பேசினார். அப்போது அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் போன்ற தேசிய அளவிலான நெருக்கடியான சூழலில், … Read more

டி20 கிரிக்கெட்; அதிவேக 2000 ரன்கள்… சாதனை பட்டியலில் இடம் பிடித்த சாய் சுதர்சன்

அகமதாபாத், 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து குஜராத்தின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.20 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35.00 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 68.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. EQ of M: 4.5, On: 02/05/2025 … Read more

கேரன்ஸை விட பிரீமியம் வசதிகளுடன் கியா கிளாவிஸ் வெளியாகிறதா..! | Automobile Tamilan

கேரன்ஸ் எம்பிவி காரிலிருந்து பிரீமியம் வசதிகளை கொண்ட கியா நிறுவனத்தின் புதிய கிளாவிஸ் எம்பிவி மே 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு அனேகமாக நடப்பு மே மாத இறுதியில் விலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் கியா வெளியிட்டிருந்த சிரோஸ் எப்படி 4 மீட்டருக்கு குறைவான எஸ்யூவி சந்தையில் சொனெட்டை விட மாறுபட்டதாக அமைந்திருக்கின்றதை போலவே கிளாவிஸ் எம்பிவி சற்று மாறுபட்ட வசதிகளுடன் அனேகமாக ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கலாம். எஞ்சின் ஆப்ஷனில் … Read more

அதிமுக-பாஜக வாக்குகளை பிரிக்க விஜய் மூலம் சதி: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: அ​தி​முக -பாஜக கூட்​டணி வாக்​கு​களை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்​கிறது என்று இந்து மக்கள் கட்​சித் தலை​வர் அர்​ஜுன் சம்​பத் கூறி​னார். தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்டை வளவன்​புரத்​தில் வராஹி அம்​மன் கோயி​லில் இந்து மக்​கள் கட்சி சார்​பில் நேற்று நடை​பெற்ற சத்​ரு சம்​ஹார யாகத்​தில் கலந்​து​கொண்ட அர்​ஜுன் சம்​பத், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பயங்​கர​வாதத்தை வளர்க்​கும் பாகிஸ்​தான் மற்​றும் பயங்​கர​வாதம் அழிய​வும், நமது நாட்​டின் ராணுவம் வலிமை பெற​வும், யுத்​த​த்தில் வெற்றி பெற​வும் … Read more

உத்தராகண்டில் கேதார்நாத் கோயிலில் நடை திறப்பு

டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதை அடுத்து புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் நேற்று பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. உத்தராகண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர். இது சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இமயமலையில் அமைந்துள்ள இக்கோயில்கள் கோடையில் 6 மாதங்கள் மட்டும் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும். இந்நிலையில் உத்தராண்டில் வருடாந்திர சார்தாம் யாத்திரை கடந்த புதன்கிழமை தொடங்கியது. அன்று கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்கள் … Read more

Retro: "கனிமா பாட்டு செம மொக்கையா இருந்தது" – ஓப்பனாக பேசிய சந்தோஷ் நாராயணன்; ஷாக் ஆன சூர்யா!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ரெட்ரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் கண்ணாடிப் பூவே, கனிமா, தி ஒன் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ரெட்ரோ திரைப்படத்துக்கான புரொமோஷனின் ஒரு பகுதியாக கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, சந்தோஷ் நாராயணன் உரையாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இதில் கனிமா பாடல் உருவாக்கம் குறித்துப் பேசியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். கனிமா பாடலை ஷூட் செய்யும்போது பாடல் கேவலமாக இருந்தது என்று அவர் கூறியதும் அதற்கு … Read more