பெங்களூரு கூட்ட நெரிசல்: கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரும் தாங்களாக முன்வந்து பதவி விலகி உள்ளனர். குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 3-ம் தேதி நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, … Read more

ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால்… இந்திய ஓடிஐ அணியின் அடுத்த கேப்டன் யார்…?

Shreyas Iyer: இந்திய அணியில் தற்போது சுக்கிரன் யாருக்கு உச்சத்தில் இருக்கிறது என கேட்டால் கோடிக்கணக்கானவர்கள் ஒரே விதமாக சொல்வது ஒருவரின் பெயரைதான்… அது ஷ்ரேயாஸ் ஐயர்தான். இவர் தனது கிரிக்கெட் வாழ்வின் 2வது உச்சத்தை அனுபவித்து வருகிறார் எனலாம். Shreyas Iyer: உச்சத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஷ்ரேயாஸ் ஐயர் 2014ஆம் ஆண்டிலேயே முதல்தர போட்டிகளில் விளையாடத் தொடங்கிவிட்டார். 2015ஆம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். 2017ஆம் ஆண்டில் … Read more

தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன்…

தகுதியே இல்லாமல் 50 பேருக்கு ஆபரேஷன். உண்மையான பெயர் பங்கஜ் மோகன். உண்மையிலேயே எம்பிபிஎஸ் பட்டம் வாங்கியவர். ஆனால் சொல்லிக் கொண்டதோ தன்னுடைய முழுப்பெயர், பங்கஜ் மோகன் சர்மா. முதுநிலை படிப்பான எம்டி மற்றும் DNP (Cardiology) ஆகிய மேற்படிப்புகளை முடித்ததாகவும் சொல்லிக்கொண்டு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து இருக்கிறார். 50க்கும் மேற்பட்டோருக்கு இருதய அறுவை சிகிச்சைகளையும் செய்து வந்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு வழக்கறிஞருக்கும் சமூக ஆர்வலருக்கும் டாக்டர் மோகன் சர்மா மீது சந்தேகம். … Read more

Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீகார் பெண்ணின் பேச்சு

ராகுல் காந்தியின் சமீபத்திய பீகார் பயணம் சுவாரஸ்யமான உரையாடல்களுக்கு வழிவகுத்துள்ளது. கயாவில் மகிளா சம்வாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சமூக வலைத்தளங்களில் ‘Pad Girl’ என அறியப்படும் ரியா பஸ்வான் என்ற பெண்ணிடம் பேசினார். அந்தப் பெண் ராகுல் காந்தியிடம், அவரை முன்மாதிரியாகக் கொண்டே அரசியலில் நுழைந்ததாகவும், அவரைப் போலவே திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். Ragul Gandhi ட்விட்டரில் வைரலாகிவரும் வீடியோவின்படி, ரியா அரசியலில் பெண்களை ஈடுபடுத்துவதற்கான காங்கிரஸின் முன்னெடுப்பான சக்தி அபியான் மூலமே … Read more

பாளை.யில் ரூ.100 கோடியில் ‘காயிதே மில்லத் நூலகம்’ அமையும் இடத்தில் ஆய்வு

நெல்லை: பாளையங்கோட்டையில் ரூ.100 கோடி மதிப்பில் காயிதே மில்லத் பெயரில் நவீன நூலகம் அமையவுள்ள இடத்தை, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் பொது நூலக இயக்குநர் பொ.சங்கர் ஆய்வு செய்தார். தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் நெல்லையில் நவீன நூலகம் கட்டப்படும் என்றும், அதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்த நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று கடந்த … Read more

ராமர் கோயிலில் 45 கிலோ தூய தங்கமும், சூரத் வைர வியாபாரி நன்கொடையின் பங்கும்!

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் சூரத்தின் வைர வியாபாரியின் நன்கொடை அதிக விலைமதிப்பு உள்ளவையாகக் கருதப்படுகிறது. அயோத்தி ராமர் கோயிலின் முக்கியக் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. எட்டு துணை கோயில்களின் கர்ப்பக்கிரகங்களுக்கான சிலைகளின் பிராண பிரதிஷ்டைப் பணியும் முடிவடைந்துள்ளன. சமீபத்திய நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். பிரதான ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எனினும், அருங்காட்சியகம், அரங்கம் மற்றும் விருந்தினர் மாளிகை … Read more

இந்த படத்துக்கு 1 கோடி சம்பளம் வாங்கினேன்.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்

இசையமைப்பாளர், நடிகர்கள், தயாரிப்பாளர் என்று பல தோற்றத்தை கொண்ட விஜய் ஆண்டனி தான் முதல் முதலில் எந்த படத்திற்காக ஒரு கோடி சம்பளம் வாங்கியிருந்தார் என்கிற தகவலை பகிர்ந்ததுள்ளார்.

நாள் ஒன்றுக்கு எவ்வளவு மதுபானங்கள் கொள்முதல் – விற்பனை? தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நாள் ஒன்றுக்கு எவ்வளவு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை?  செய்யப்படுகிறது,  தமிழக அரசு எவ்வளவு மதுபான கொள்முதல் செய்கிறது,  என்பதை இணையதளத் தில் பதிவேற்ற உத்தரவிடக்கோரிய வழக்கில்,   டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு  விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சமூக ஆர்வலரான,  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன்,  இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,  ஒவ்வோர் ஆண்டும் டாஸ்மாக் வலைதளத்தில் வெளியிடப்படும் ஆண்டறிக்கையில் கொள்முதல் … Read more

Andhra: "தொழிலாளர்களுக்குத் தினமும் 10 மணிநேர வேலை" – சந்திரபாபு அரசு முடிவு; வலுக்கும் எதிர்ப்பு

ஆந்திரா மாநிலத்தை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தெலுங்கு தேசம் தலைமையிலான அரசு, தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கட்டாய வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் தொழில்களை வளர்ப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொழிலாளர் சங்கங்கள் வன்மையாகக் கண்டித்து வருகின்றன. “இது தொழிலாளர்களை அடிமையாக்கும் சட்டம்” என வாதிடுகின்றனர். வேலை நேரம் முதலீடுகளை ஈர்க்க திட்டம்! … Read more

“முருக பக்தர்களுக்கு எதிரானது திமுக அரசு” – எல்.முருகன் விமர்சனம்

கோவை: “திமுக அரசானது முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளது” என்று மத்திய இணையமைச்சரும், தமிழக பாஜகவின் மூத்த தலைவருமான எல்.முருகன் விமர்சித்துள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சனிக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு பிரச்சினையை எழுப்பியுள்ளார். முதல்வர்தான் அரசை நடத்துகிறாரா? தம்பிகள்தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனும் நிலை … Read more