ஏஜி டிஎம்எஸ் உட்பட 3 மெட்ரோ நிலைய நுழைவு வாயிலில் தானியங்கி டிக்கெட் பரிசோதிக்கும் இயந்திரத்தை மாற்ற முடிவு

சென்னை: சென்னையில் இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. இதன் ஒரு பகுதியாக, நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் எளிதாகச் செல்லும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் தானியங்கி டிக்கெட் பரிசோதிக்கும் இயந்திரங்களை, திறந்த முறையில் செயல்படும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் … Read more

கொல்கத்தா இஸ்கான் கோயிலின் ஜெகந்நாதர் ரதத்தில் சுகோய் போர் விமான சக்கரம்

கொல்கத்தா: கொல்கத்தா இஸ்கான் கோயிலில் வலம் வர உள்ள ஜெகந்நாதர் ரதத்தில் சுகோய் ரக போர் விமானத்தின் சக்கரம் பொருத்தப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் கோயிலில் வரும் 27-ம் தேதி வருடாந்திர ரத யாத்திரை நடைபெற உள்ளது. இதில் வலம் வரவுள்ள ஜெகந்நாதர் ரதத்தில் ரஷ்யாவின் சுகோய் ரக போர் விமானத்தின் சக்கரங்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சக்கரங்கள் விமானம் புறப்படும்போது மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் சுற்றும் திறன் வாய்ந்தவை ஆகும். ஆனால் … Read more

நைஜீரி​யா​ சாலை விபத்தில் 22 விளை​யாட்டு வீரர்​கள் உயி​ரிழப்பு

அபுஜா: நைஜீரி​யா​வில் நடந்த சாலை விபத்​தில் 22 விளை​யாட்டு வீரர்​கள் உயி​ரிழந்​தனர். நைஜீரிய நாட்​டின் தென்​மேற்கு பகு​தி​யில் அமைந்​துள்ள ஓகுன் மாகாணத்​தில் நடை​பெற்ற விளை​யாட்​டு போட்​டிகளில் பங்​கேற்று விட்டு 35 விளையாட்டு வீரர்​கள், பயிற்​சி​யாளர்​கள் நேற்று முன்​தினம் இரவு பேருந்​தில் வீடு திரும்பி கொண்​டிருந்​தனர். இந்த பேருந்து சிரோ​மாவா என்ற இடத்​தில் உள்ள மேம்​பாலத்​தில் சென்​ற​போது கட்​டுப்​பாட்டை இழந்து, மேம்​பாலத்​தின் தடுப்​புச்​சுவரை இடித்​துக் கொண்டு தரை​யில் விழுந்​தது. இதில் 22 பேர் உயி​ரிழந்​தனர். காயமடைந்​தவர்​கள் அரு​கிலுள்ள மருத்​து​வ​மனை​யில் … Read more

எந்த ஒரு கேப்டனும் செய்யாத சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர்!

Shreyas iyer new record: நேற்று (ஜூன் 1) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு சென்றது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த கேப்டனும் செய்யாத ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.  ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியை சேர்த்து இதுவரை மூன்று அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். டெல்லி மற்றும் கொல்கத்தா அணியை ஏற்கனவே வழிநடத்திய … Read more

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு…

சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய யார் அந்த சார், விவகாரத்தில் அண்ணா பல்கலை மாணவி வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.  அண்ணா பல்கலைக்கழக மாணவி  பாலியல் வழக்கில் கைதாகி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள   முன்னாள் திமுக பிரமுகர் ஞானசேகரன் மீது 36 வழக்குகள்  உள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர் திமுக அமைச்சர்களுடன் தொடர்பான தொடர்புகளை வைத்திருந்ததால், அவனது … Read more

Upcoming Electric cars in India – அடுத்தடுத்து இந்தியா வரவிருக்கும் எலக்ட்ரிக் கார்கள்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தையில் குறிப்பாக நான்கு சக்கர வாகனங்கள் பிரிவில் புதிதாக பல்வேறு மாடல்கள் விற்பனைக்கு வெளியாகி வரும் நிலையில் ஜூன் 2 முதல் அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் ஹாரியர்.ev, காரன்ஸ் கிளாவிஸ்.ev, வின்ஃபாஸ்ட் VF7, VF6, மாருதி சுசூகி e விட்டாரா, டெஸ்லா, மஹிந்திரா 3XO EV, சுமார் ஏழுக்கு மேற்பட்ட எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இவை மட்டுமல்ல எம்ஜி செலக்ட் மூலம் சைபர்ஸ்டெர், M9 உள்ளிட்ட பல்வேறு பிரிமீயம் … Read more

Malappuram: புலிக்கு வைத்த கூண்டில் தானாக வந்து சிக்கிய சிறுத்தை! – நடந்தது என்ன?

நாட்டில் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகரித்து வரும் மாநிலங்களில் கேரள மாநிலமும் முக்கிய இடங்களில் ஒன்றாக இருக்கிறது. வயநாடு, மலப்புரம் போன்ற பகுதிகளில் அதிகரித்து வரும் காடழிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட காரணங்களால் குடியிருப்பு பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் இயல்பாகி வருகிறது. இதனால் எதிர்கொள்ளல்களும் அதிகரித்து வருகிறது. கூண்டில் சிக்கிய சிறுத்தை இந்த நிலையில், மலப்புரம் அருகில் உள்ள கருவாரக்குண்டு ரப்பர் தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த கஃபூர் அலி என்பவர் … Read more

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரிப்பு

தரு​மபுரி / மேட்​டூர்: தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 3,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 5,000 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் மழை பெய்​வ​தா​லும், கபினி அணையி​லிருந்து காவிரி​யில் தண்​ணீர் திறக்க வாய்ப்பு உள்​ள​தா​லும் வரும் நாட்​களில் ஒகேனக்​கல்​லுக்கு நீர்​வரத்து அதி​கரிக்க வாய்ப்பு உள்​ள​தாக நீர்​வளத்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர். மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 2,913 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 3,017 கனஅடி​யாக … Read more

மத நிகழ்ச்சியில் பங்கேற்காத ராணுவ அதிகாரி பணி நீக்கத்தை உறுதி செய்தது நீதிமன்றம்

புதுடெல்லி: மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்த ராணுவ அதிகாரியின் பணி நீக்கத்தை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ராணுவத்தில் கடந்த 2017-ம் ஆண்டு லெப்டினன்ட்டாக பணியில் சேர்ந்தவர் சாமுவேல் கமலேசன். இவர் சீக்கியர் படைப்பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்தப் படைப்பிரிவினர் தங்கியிருக்கும் முகாமில் கோயில் ஒன்றும், குருதுவாரா ஒன்றும் இருந்தது. இங்கு வீரர்கள் பங்கேற்கும் வழிபாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சாமுவேல் கமலேசன் மறுப்பு தெரிவித்தார். தான் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர் என்றும், சீக்கியர் படைப்பிரிவு முகாமில் … Read more

உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிப்பு

கீவ்: கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா ஆகிய 4 விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் நேற்று தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ரஷ்ய விமான படைத் தளங்கள் மீது குண்டுமழை பொழிந்தன.இதில் 4 விமானப்படை தளங்களிலும் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் தீயில் எரிந்து அழிந்தன. இதுகுறித்து உக்ரைன் … Read more