நீட் மறுதேர்வு நடத்த கோரிய மாணவர்களின் மனுக்கள் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மின்சார துண்டிப்பு காரணமாக நீட் தேர்வை முழுமையாக எழுத முடியாததால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த மே 4-ம் தேதி நடைபெற்றது. 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், ‘அன்றைய தினம் சென்னையில் கனமழை … Read more

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி

ஸ்ரீநகர்: மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட தாக்குதலே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், “பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” என்று அவர் உறுதி அளித்தார். ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம், செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் … Read more

ஜூன் 11ல் வேலூர், தருமபுரி உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்…

சென்னை:  தமிழ்நாட்டில், தமிழகத்தில் ஜூன் 10,11,12 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ஜூன் 11ந்தேதி அன்று வேலூர், தருமபுரி உள்பட  9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது,” என  தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை.. வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 10ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை … Read more

ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை கருத்து: குஜராத் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கைது

காந்தி நகர், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. அதேவேளை, இந்தியாவின் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பாரீஸ், ஆண்டின் 2-வது ‘கிராண்ட்ஸ்லாம்’ தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவி அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி – ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை லோரென்சோ முசெட்டி கைப்பற்றினார். 2வது மற்றும் 3வது செட்டை அல்காரஸ் கைப்பற்றினார் . 4வது செட்டில் 2-0 என அல்காரஸ் முன்னிலையில் இருந்தபோது … Read more

வியட்நாமில் பைக் விபத்து: இந்திய மருத்துவ மாணவன் பலி

ஹனோய், ஆசியாவில் கம்போடியா அருகே உள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் இந்தியாவை சேர்ந்த மாணவ, மாணவியர் பலர் மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகள் பயின்று வருகின்றனர். இதனிடையே, தெலுங்கானா மாநிலம் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஷித் அஷ்ரித் (வயது 21). இவர் வியட்நாமின் கென் தொ நகரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3ம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். இந்நிலையில், அர்ஷித் நேற்று தனது நண்பருடன் கென் தொ நகரில் பைக்கில் சென்றுள்ளார். பைக்கை … Read more

ராமதாஸ் – அன்புமணி இடையே விரைவில் சமாதானம்: ஜி.கே.மணி நம்பிக்கை

திண்டிவனம்: ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் குறித்து பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், “விரைவில் இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸை, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியது: “ராமதாஸும், அன்புமணியும் 45 நிமிடங்கள் பேசினர். இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இருவரும் சந்திக்கவில்லை என்று தவறான தகவலைப் … Read more

பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜினீயரிங் அதிசயம்’ – பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே சிந்து நதியின் துணை நதியான செனாப் நதியின் குறுக்கே புதிய பாலம் கட்ட கடந்த 2002-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2004-ம் ஆண்டில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பாலத்தின் உறுதித்தன்மையில் கேள்வி எழுந்ததால் கடந்த 2009-ம் ஆண்டில் … Read more

விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம்

சென்னை விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்று ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா தொற்று பரவல் சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி  257 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் … Read more

'குற்றங்களின் தலைநகரமாக பீகார் மாறிவிட்டது' – ராகுல் காந்தி

பாட்னா, பீகார் மாநிலம் நலந்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “பீகார் மாநிலம் முன்பு அமைதி மற்றும் நீதியின் அடையாளமாக திகழ்ந்தது. ஆனால் இந்தியாவில் இன்று குற்றங்களின் தலைநகரமாக பீகார் மாறிவிட்டது. மோடி அரசு ஒருபோதும் உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாது. ஏனெனில் உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் நாளில், அவர்களின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும். அரசியலமைப்பை காப்பாற்றவும், நாட்டின் ஒட்டுமொத்த … Read more