சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: இன்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்

தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று சீனாவின் தியான்ஜின் நகருக்கு சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர் இன்று சந்தித்துப் பேசுகிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 15-வது இந்திய, ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதன் பிறகு அவர் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் … Read more

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் – 3 பேருக்கு அரிவாள் வெட்டு – போலீஸ் தடியடி…

திருச்சி: திருச்சி  பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம்  திறக்கப்பட்டது முதலே அங்கு அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக   நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல்  ஏற்பட்டது. இதில் சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில்,  போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில்,  பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்  அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட வகையில்,  சுமார்  38 ஏக்கா் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் … Read more

“இந்த அளவுக்கு நான் வர்றதுக்கு காரணம் அவர்தான்'' – மறைந்த S.N சக்திவேல் குறித்து M.S பாஸ்கர்

‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரின் இயக்குநர் S.N சக்திவேல் மறைவுக்கு, நாதழுதழுக்க நடிகர் M.S பாஸ்கர் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “எஸ்.என் சக்திவேல் சார் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய நண்பர். என்னுடைய வெல்விஷர். பட்டாவி என்ற கதாபாத்திரம் மூலமாக தமிழக மக்களிடையே எனக்கு பெயர் கிடைத்து இந்த அளவிற்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு ராடார் நிறுவனமும், சக்திவேல் சாரும்தான் காரணம். S.N சக்திவேல் அவர் இன்று விடியற்காலை இறைவனடி சேர்ந்துவிட்டார் … Read more

மூப்பனாரை பிரதமர் ஆக விடாமல் தடுத்தது துரோகம்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சென்னை: ஆளுமைமிக்க தலைவரான மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது தமிழர்களுக்கு செய்த மிகப் பெரிய துரோகம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று மலர்வளையம் வைத்தும், மலர்கள் … Read more

அலுவலக கேன்டீனில் பீஃப் உணவுக்கு நோ சொன்ன மேலாளர்: கொச்சியில் வங்கி ஊழியர்கள் நூதன போராட்டம்

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாக கேன்டீனில் மாட்டிறைச்சி (பீஃப்) உணவுகள் சாப்பிடவோ, சமைத்து விற்கவோ கூடாது என்று புதிதாக பொறுப்பேற்ற மேலாளர் உத்தரவிட, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் நடத்திய நூதனப் போராட்டம் கவனம் பெற்றுள்ளது. இது குறித்து ஊழியர்கள் கூறுகையில், “கொச்சி கனரா வங்கியின் மேலாளராக அண்மையில் பிஹாரை சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், கொச்சி கனரா வங்கியில் உள்ள கேன்டீனில் பீஃப் உணவு விற்கக் கூடாது, ஊழியர்கள் … Read more

ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை: மேல்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அதிபர் ட்ரம்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ட்ரம்ப் அரசு மேல்முறையீடு செய்ய அக்டோபர் 14-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரிவிதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடை பிடிக்கும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். கனடா, மெக்சிகோ உட்பட … Read more

Jio Frames: மெட்டாவுக்கு போட்டியாக ஏஐ ஸ்மார்ட் கிளாஸை அறிமுகம் செய்த ரிலையன்ஸ்

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 48-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஜியோ Frames என்ற ஸ்மார்ட் கிளாஸை அறிமுகம் செய்தார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான ஆகாஷ் அம்பானி. இந்திய மொழிகளின் சப்போர்ட் உடன் ஏஐ திறன் கொண்ட இயங்குதளத்தில் ஜியோ Frames இயங்கும். இந்த ஸ்மார்ட் கிளாஸ் மூலம் ஹெச்.டி தரத்தில் படம் எடுக்கலாம், வீடியோ ரெக்கார்ட் செய்யலாம், சமூக வலைதளத்தில் நேரலை செய்யலாம். இதில் எடுக்கப்படும் … Read more

இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வரும் Lokah Chapter One!

துல்கர் சல்மானின்  Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது.

விவசாயிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு! நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்!

தமிழக அரசு நெற்பயிருக்கான கொள்முதல் விலையை உயர்த்தி, அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரூ.77ஆயிரத்தை நெருங்கியது: சாமானிய மக்களின் எட்டாக்கனியாக மாறுகிறது தங்கம்….!

சென்னை: சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பக்கபலமாக இருந்து வரும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இது மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்பது தெரிய வருகிறது. இன்று ஒரே நாளில்,  சரவனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது குடும்ப தலைவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  இன்று (சனிக்கிழமை)  அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76.960-க்கு விற்பனையாகி … Read more