வட + தென் மாவட்டங்களில் நாளை கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

Tn Weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 02) வட மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

GV Prakash: "இது லெஜண்ட் பயன்படுத்திய பியானோ" – தேசிய விருதுக்கு ரஹ்மான் அளித்த அன்புப்பரிசு!

71வது தேசிய விருதுகளில் சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருதை வென்றார் ஜி.வி. பிரகாஷ். இது அவர் வாங்கும் இரண்டாவது தேசிய விருதாகும். இந்தச் சாதனைக்கு ஜி.வி. பிரகாஷின் குருவும் மாமாவுமான முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தான் பயன்படுத்திய பியானோவைப் பரிசாக அளித்துள்ளார். பியானோ பியானோ GV Prakash ட்வீட் இது குறித்து, “நான் பெற்றதிலேயே மிகச் சிறந்த பரிசு இதுதான். இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் சார் இந்த அழகான வெள்ளை பியானோவை எனக்குப் … Read more

ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாமல் 5.50 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும்! சஞ்சய் மல்கோத்ரா

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என்றும், 5.50 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான எம்பிசி குழு நாட்டில் நிலவும் குறைந்த பணவீக்கம் மற்றும் அமெரிக்க வரி கொள்கைகளால் ஏற்படும் வளர்ச்சி அழுத்தங்களை மத்தியில் இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது. இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.5%லிருந்து 6.8% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட வலுவான பொருளாதார செயல்பாடு … Read more

கரூர்: "EPS உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து உளறுகிறார்" – தங்கம் தென்னரசு காட்டம்

கரூரில் நடந்த கொடுந்துயர் தொடர்பாக அரசு கொடுத்துள்ள விளக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார். அதற்குப் பதில் கருத்தாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ள பதிவில், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை அவரது பதற்றத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருக்கின்றது. எவ்வகையிலாவது இத்துயரமிகு சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று துடியாய்த் துடிப்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது. அரசு தரப்பில் செய்தியாளர் சந்திப்பில் உண்மைகள் உணர்த்தப்படும் … Read more

கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? – விஜய்க்கு செந்தில் பாலாஜி பதில்; நிமிட வாரியாக விவரிப்பு

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்தும், தவெக தரப்பிலும், விஜய் தரப்பிலும் எழுப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து வீடியோக்களை பகிர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் திரண்டது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடு அற்ற கூட்டம் என அவர் தெரிவித்துள்ளார். 41 உயிர்கள் பறிபோன கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியது: “கரூரில் மிகப் பெரிய துயரம் நடந்துள்ளது. இந்தச் … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் மேல்முறையீடு

பெங்களூரு: ​முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) தனது வீட்டு பணிப்​பெண்​ணுக்கு பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம், கடந்த மாதம் அவருக்கு சாகும் வரை சிறை தண்​டனை​யும் ரூ.10 லட்​சம் அபராத​மும் விதித்து உத்​தர​விட்​டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா தரப்​பில் கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் நேற்று மேல்​முறை​யீட்டு மனு தாக்​கல் செய்யப்​பட்​டது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: எனது வீட்டு பணிப்​பெண் போலீ​ஸாரின் தூண்​டு​தலின்​பேரில் என் … Read more

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்: பணி இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் – பின்னணி என்ன?

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வியடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு அரசு நிர்வாகம் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுக்கு 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசில் செலவீனங்களுக்கான நிதி விடுவிக்கப்படும். இந்த நிலையில், நிதி மசோதாவுக்கு ஆதரவாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் 53 சதவீதம் பேரும், ஜனநாயக கட்சியின் 47 சதவீத உறுப்பினர்களும் … Read more

தொடர்ச்சியாக 500 கோடி வசூல் படங்களில் நடித்த நடிகை! த்ரிஷா-நயன்தாரா இல்லை, யார் தெரியுமா?

Popular Actress Acted In 500 Crore Films : பிரபல நடிகை ஒருவர், தான் நடித்த படங்களில் தொடர்ச்சியாக ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்த படங்களில் நடித்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?

ஆதவ் அர்ஜுனா மீது இத்தனை வழக்குகளா? ஜாமினில் வெளிவர முடியாது! ஏன் தெரியுமா?

புரட்சிதான் ஒரே வழி எனப் பதிவிட்ட தவெக நிர்வாகி! ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளில் வழக்கு; எந்த நேரமும் கைதாகும் அபாயம்! முழு விவரம் இதோ!

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி.. எந்த சேனல், ஒடிடியில் பார்க்கலாம்? முழு விவரம்!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான தொடர், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது. இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாகும். கடந்த முறை சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளில் இந்தியா 3-0 என்ற கணக்கில் படுதோல்வி எதிர்கொண்டதால், இந்த தொடரில் வெற்றி தேவைபடுகிறது. Add Zee News as a Preferred Source ஆச்சரியமளிக்கும் ஒன்று, மைதானத்தில் தற்போதைய புற்கள் … Read more