New Aadhaar App: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் ஒரு புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியது. இது இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை டிஜிட்டல் வழியில் சேமிக்க உதவுகிறது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் கழித்து, புதன்கிழமை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பு, “ஆதார் செயலியைப் பயன்படுத்தி ஆஃப்லைன் சரிபார்ப்பு” குறித்து பங்குதாரர்களுடன் ஒரு இணையவழி கருத்தரங்கை நடத்தியது.
Add Zee News as a Preferred Source
ஆதார் செயலி
இந்த செயலி, இந்திய குடிமக்கள் மற்றவர்களுடன் தகவலை பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கும். அரசாங்க ஐடியில் உள்ள அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம், அல்லது அதில் சில விவரங்களை மறைத்து, தொடர்புடைய தகவல்களை மட்டுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு வசதி இருக்கும்.
Offline Verification Using Aadhaar App: ஆதார் செயலியைப் பயன்படுத்தி ஆஃப்லைன் வெரிஃபிகேஷன்
ஆதார் செயலியைப் பயன்படுத்தி ஆஃப்லைன் சரிபார்ப்பு குறித்த UIDAI இன் இணையவழி கருத்தரங்கில் 250 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். புதன்கிழமை UIDAI “ஆதார் செயலியைப் பயன்படுத்தி ஆஃப்லைன் வெரிஃபிகேஷன்” என்ற தலைப்பில் நடத்திய ஒரு இணையவழி கருத்தரங்கில் “250 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் பங்கேற்பாளர்கள்” கலந்து கொண்டனர். இந்த பங்கேற்பாளர்களுக்கு ஆதார் செயலி மூலம் ஆஃப்லைன் சரிபார்ப்பின் நன்மைகள் குறித்த கண்ணோட்டம் வழங்கப்பட்டது. இது பயனர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஸ்டோர் செய்ய அனுமதிக்கிறது.
UIDAI இன் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார், ஆஃப்லைன் சரிபார்ப்பு பயனர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது அடையாள சரிபார்ப்புக்கு “பாதுகாப்பான, வசதியான மற்றும் தனியுரிமையைப் பாதுகாக்கும் முறையை” வழங்கும் என்று கூறியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஃபிசிக்கல் ஆதார் அட்டைகள் மற்றும் அவற்றின் நகல்களைப் பகிர்வதையும் குறைக்கும். இந்த செயல் பெரும்பாலும் “சாத்தியமான மோசடி நடைமுறைகளுக்கு” வழிவகுக்கிறது.
புதிய ஆதார் செயலியின் பயன்பாடு
புதிய ஆதார் செயலி மூலம் ஆஃப்லைன் சரிபார்ப்பு பல்வேறு சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் UIDAI அதிகாரிகள் எடுத்துரைத்தனர்:
– ஹோட்டல்களில் செக் இன் செய்யும் போது,
– குடியிருப்பு சொசைடிகளில் நுழையும்போது மற்றும்
– வழக்கமாக ஆதார் அட்டையின் நகலை காட்டுமாறு கேட்கப்படும் நிகழ்வுகளுக்கு செல்லும்போது.
முன்னர் குறிப்பிட்டது போல, UIDAI அதன் புதிய ஆதார் செயலியை Android மற்றும் iOS பயனர்களுக்காக அறிமுகப்படுத்துவதாக அறிவித்ததை அடுத்து இந்த தகவல் வந்துள்ளது. இது மக்களுக்கு பல்வேறு செயல்பாடுகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த செயலி ஆதார் அட்டை தகவல்களைப் பாதுகாப்பாகச் சேமிப்பதாக உறுதியளிக்கிறது. அதே நேரத்தில் இந்திய குடிமக்கள் ஆதார் அட்டையின் மாஸ்க்ட் பதிப்பை அல்லது அனைத்து விவரங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இது அனுமதிக்கிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் கிடைக்கும் UIDAI இன் ஆதார் செயலி, மக்கள் ஆதார் அட்டையின் நகலை பதிவிறக்கம் செய்து தங்கள் வீட்டிற்கு ஒரு பாலிவினைல் குளோரைடு (PVC) அட்டையை ஆர்டர் செய்ய அனுமதிக்கும் mAadhaar செயலியை மாற்றாது. புதிய ஆதார் செயலியின் நோக்கம் mAadhaar செயலியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
About the Author

Sripriya Sambathkumar
Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs.
She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.
…Read More