அல் பலா பல்கலை. வேந்தருக்கு டெல்லி போலீஸார் சம்மன்

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹரி​யா​னாவைச் சேர்ந்த அல் பலா பல்​கலைக்கழகம் மீது மோசடி மற்​றும் போலி ஆவணங்​கள் தயாரித்​தல் தொடர்​பாக குற்​றப்​பிரிவு போலீ​ஸார் ஏற்​கெனவே இரண்டு எப்​ஐஆர்​களை பதிவு செய்​துள்​ளனர். இந்த நிலை​யில், தீவிர​வாத தாக்​குதலில் ஈடு​பட முயன்ற மருத்​து​வர்​களுக்​கும், அப்​பல்​கலைக்​கழகத்​துக்​கும் இடையே​யான தொடர்பு குறித்து விசா​ரிக்​கப்பட வேண்​டி​யுள்​ளது. இதன் காரண​மாக டெல்லி போலீ​ஸார் வேந்தர் ஜவாத் அகமதுக்கு சம்​மன் அனுப்​பி​யுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. வேந்தரின் தம்பி கைது: இந்நிலையில் 25 ஆண்​டு​களுக்கு முன்பாக நடை​பெற்ற … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : தகுதியில்லாதவர்கள் பட்டியல்! இதுதான்

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர்  உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களில் யாரெல்லாம் தகுதியில்லாதவர்கள் என தமிழ்நாடு அரசு அறிவக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஆந்திராவில் முக்கிய மாவோயிஸ்டு தலைவன் உள்பட 6 பேர் சுட்டுக்கொலை.. யார் இந்த மத்வி ஹித்மா..?

ராய்ப்பூர். சத்தீஸ்கர் மாநிலத்தில் முற்றி மாவோயிஸ்டுகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பலர் சரண் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திரா, சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அல்லுரி சீதாராமராஜ் மாவட்ட காட்டுப்குதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். … Read more

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

ராவல்பிண்டி, பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இன்று தொடங்கிய இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரையன் பென்னட் – மருமணி களமிறங்கினர். பாகிஸ்தான் பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. … Read more

பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன்

பாரீஸ், உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3½ ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவற்றின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியால் உக்ரைன் தொடர்ந்து போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை … Read more

கோயில் செயல் அலுவலர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு செயல் அலுவலர்களை நியமித்து பிறப்பித்த உத்தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 45 ஆயிரத்து 809 கோயில்களை 668 செயல் அலுவலர்கள் நிர்வகித்து வருவதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் … Read more

2015-ல் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தவரை அடித்துக் கொன்ற கும்பல்: வழக்கை வாபஸ் பெற உ.பி. அரசு மனு

புதுடெல்லி: கடந்த 2015-ல் உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்துக்காக முகமது அக்லாக் என்பவர் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடந்த அக்லக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றவாளிகள் மீதான வழக்குகளையும் வாபஸ் பெறும் பணியை உத்தரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டையே … Read more

நெல்லைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

TN weather update: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 18) கனமழை பெய்யும் என்றும் திருநெல்வேலியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 

இயற்கை வேளாண்மை மாநாடு: பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் கடும் கட்டுப்பாடுகள் – போக்குவரத்து மாற்றம், டிரோன்கள் பறக்க தடை

கோவை: கோவை கொடிசியாவில் நடைபெறும் இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர்  மோடி நாளை (நவ.19)  வருகை தர  உள்ள நிலையில், அங்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கோவை கொடிசியா மற்றும் முக்கிய பகுதிகளில் 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபபட்டு உள்ளனர். மேலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை வரும் பிரதமரிடம் இயற்கை வேளாண் பொருட்கள் தயாரிப்பு, தொழில்நுட்பங்கள் … Read more

ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து கோரவிபத்து: பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி

காந்தி நகர், குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் மோடசா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு நேற்று குழந்தை பிறந்தது. பச்சிளம் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் நேற்று இரவே மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அகமதாபாத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆம்புலன்சில் குழந்தையின் தந்தை, செவிலியர்கள், டாக்டர் உள்பட 7 பேர் பயணித்தனர். இந்நிலையில், மோடசா – தன்சுரா நெடுஞ்சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தபோது ஆம்புலன்சில் திடீரென தீப்பற்றியது. உடனடியாக ஆம்புலன்சை டிரைவர் நிறுத்தியுள்ளார். ஆம்புலன்சில் இருந்து டிரைவர் உள்பட 3 பேர் கிழே … Read more