தேர்தல் காலத்தில் பறக்கும் படையினர் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்கின்றனர். ஆனால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களின் வாகனங்களை மட்டும் திட்டமிட்டு தொந்தரவு செய்யும் வகையில் மத்திய படையினர் சோதனை செய்கிறார்கள் என்று அந்தக் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை. வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய மம்தா, தான் அதிகாலை கொல்கத்தா விமான நிலையத்திற்குச் செல்லும் போது […]