உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்து வரும் திட்டமில்லை ; மத்திய அரசு <!– உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்து வரும் திட்டமில… –>

ரஷ்யா – உக்ரைன் இடையே பதற்றம் அதிகரித்து இருக்கும் சூழலில், உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் மற்றும் குடிமக்களை உடனடியாக இந்தியா அழைத்து வரும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, உக்ரைனுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றார்.

ஏர் பபுள் திட்டத்தின் கீழ் ஏற்கனவே குறிப்பிட்ட எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அந்த விமானங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு கூடுதல் விமானங்களை இயக்க அனுமதித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

உக்ரைனில் இந்திய தூதரகம் வழக்கம் போல் செயல்பட்டு வருவதாகவும் அரிந்தம் பக்சி தெரிவித்தார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.