மகன் இறந்து 2 மாதத்தில் பிரபல பாலிவுட் நடிகர் மரணம்: திரைத்துறையினர் அஞ்சலி

மும்பை: மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷிவ் சுப்ரமணியம் இன்று திடீரென இறந்தார். அவரது மகன் இறந்து 2 மாதங்கள் ஆன நிலையில், தற்போது நடிகர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான ஷிவ் சுப்ரமணியம், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் திடீரென காலமானார். அவரது திடீர் மறைவுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூளை கட்டி நோயால் பாதிக்கப்பட்ட அவரது மகன் இறந்தார். தற்போது திடீரென ஷிவ் சுப்ரமணியம் காலமானதால் அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரைப்பட தயாரிப்பாளர்கள் ஹன்சல் மேத்தா மற்றும் அசோக் பண்டிட் ஆகியோரும் ஷிவ் சுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கடைசியாக 2021ம் ஆண்டு சன்யா மல்ஹோத்ரா மற்றும் அபிமன்யு தசானி நடித்த ‘மீனாட்சி சுந்தரேஷ்வர்’ படத்தில் நடித்தார். நடிகராக மட்டுமல்லாமல், பாலிவுட் படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். இவரது இறுதி சடங்குகள் மேற்கு அந்தேரி சுடுகாட்டில் நடைபெறும் என்று அவரது உறவினர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.