ஐபிஎல் : மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

மும்பை,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள்  மோதின   .
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை  தேர்வு செய்தது .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக தவான் ,மயங்க் அகர்வால் களமிறங்கினார் .தொடக்கம் முதல் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர்.
அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்தது .சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர் .மயங்க் அகர்வால் 52 ரன்களிலும் ,தவான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி நேரத்தில் ஜிதேஷ் சர்மா ,ஷாருக்கான் அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு  198 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 199 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 28 ரன்களிலும்,இஷான் கிஷன் 3 ரன்களிலும் , ஆட்டமிழந்தனர் .
பின்னர் வந்த திலக் வர்மா ,டெவால்ட் பிரீவிஸ் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர் ராகுல் சஹர் வீசிய ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பறக்க விட்டு  வாணவேடிக்கை காட்டினார் டெவால்ட் பிரீவிஸ்.
தொடர்ந்து விளையாடியாய அவர் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் திலக் வர்மா 36 ரன்களிலும் ,பொல்லார்ட் 10 ரன்களிலும் (ரன் அவுட் ) ஆட்டமிழந்தனர் .
மறுபுறம் நிலைத்து  ஆடிய சூர்யகுமார்  யாதவ் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் 
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9  விக்கெட் இழப்பிற்கு 186  ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது .
இதனால் 12  ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.