கராச்சி:பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்து மதத்தை சேர்ந்த பெண் போலீஸ் டி.எஸ்.பி.,யாக தேர்வாகி உள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில உள்ள ஜகோபாபாத் என்ற இடத்தை சேர்ந்தவர் மணிஷா ரூபேட்டா 26. சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். இவரையும் இவரது சகோதர சகோதரிகளையும் கராச்சி அழைத்து வந்து அவரது தாயார் வளர்த்து ஆளாக்கினார். மணிஷாவின் மூன்று சகோதரிகள் டாக்டர்களாக உள்ளனர். ஒரு சகோதரர் எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார். எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு எழுதிய மணிஷா ஒரு மதிப்பெண்ணில் அதை தவறவிட்டார். இதையடுத்து அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதி அதில் 16வது இடத்தில் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து சிந்து மாகாணத்தில் போலீஸ் டி.எஸ்.பி.,யாக தேர்வாகி உள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்து மதத்தை சேர்ந்த பெண் டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்துள்ளதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
கராச்சி:பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்து மதத்தை சேர்ந்த பெண் போலீஸ் டி.எஸ்.பி.,யாக தேர்வாகி உள்ளார்.பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில உள்ள ஜகோபாபாத் என்ற இடத்தை சேர்ந்தவர் மணிஷா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்