உத்தரப்பிரதேசத்தின் ஜலான் மாநிலத்தில், கைத்தேரி கிராமத்தில், 296 கிமீ நீளமுள்ள பந்தல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 16-ம் அன்று திறந்துவைத்தார். 296 கிலோமீட்டர் நீளம்கொண்ட இந்த நான்குவழி நெடுஞ்சாலை அந்த மாநிலத்திலுள்ள ஏழு மாவட்டங்களை கடந்து செல்கிறது. இந்தச் சாலைக்கு பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த ஒரு வாரத்தில், கனமழை காரணமாக, சாலையின் ஒரு பகுதியில் ஆழமான பள்ளங்கள் தோன்றியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிமீது கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன.
ये तो गनीमत है कि पाबंदी के बावजूद हाथी जी सपा के बनाए मजबूत ‘आगरा-लखनऊ एक्सप्रेस-वे’ पर विचरण कर रहे हैं, कहीं ग़लती से ये बुंदेलखंड एक्सप्रेस-वे पर चले गये होते तो गुणवत्ता का मारा वो बेचारा इनका वज़न सह नहीं पाता… वो ख़ुद खंडित होता और ये चोटिल।
एक्सप्रेस-वे सुरक्षा कहाँ है? pic.twitter.com/pqc4H0z5SY
— Akhilesh Yadav (@yadavakhilesh) July 29, 2022
இந்த நிலையில், இது தொடர்பாக, அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சமாஜ்வாடி கட்சியால் வலிமையாகக் கட்டப்பட்ட ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ் வழியாக யானை நடந்து செல்கிறது. இதுவே யானை தவறுதலாக பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலையில் (பாஜக ஆட்சியில் அமைக்கப்பட்டது) நடந்து சென்றிருந்தால் எடை தாங்காமல் சாலை இடிந்து விழுந்திருக்கும். யானைக்கும் காயம் ஏற்பட்டிருக்கும். எக்ஸ்பிரஸ் சாலைக்கான பாதுகாவலர்கள் எங்கே?” எனப் பதிவிட்டிருக்கிறார்.
பாஜக-வினர் அகிலேஷின் இந்தப் பதிவுக்கு எதிர்வினை ஆற்றிவருகிறார்கள்.