திமுக தலைவராக இல்லாமல், தமிழக முதல்வராக அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் – எல்.முருகன்!

திமுக தலைவராக இல்லாமல் தமிழக முதல்வராக தானாக முன்வந்து அனைத்து பண்டிகைகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல் முருகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் கொழுக்கட்டை வைத்து வணங்காவிட்டாலும், குறைந்தபட்சம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களையாவது சொல்லி இருக்க வேண்டும் என கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.