பிரிட்டன் ராணி காலமானார்| Dinamalar

லண்டன்:மருத்துவக் கண்காணிப்பில் இருந்த ‘பிரிட்டன் ராணி எலிசபெத் 96, நேற்று இரவு காலமானார்.

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் ஸ்காட்லாண்டு நகரில் பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். வயது மூப்பால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள் ராணிக்கு ஏற்பட்டன. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது.

டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ராணியின் மகனும் பிரிட்டன் இளவரசருமான சார்லஸ், மனைவி கமீலா உள்ளிட்ட ராணியின் குடும்பத்தினர் பால்மோல் வந்துள்ளனர் என கூறப்பட்டது.இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று இரவு அவர் காலமானார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.