வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டொடோமா: தான்சானியாவில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் மோசமான வானிலை காரணமாக, ஏரிக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்து இதுவரை 23 பேர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
தான்சானியாவின் வான்ஜா என்ற நகரில் இருந்து புகோபா என்ற நகருக்கு 49 பயணிகளுடன் விமானம் சென்று கொண்டிருந்தது. புகோபா விமான நிலையம் அருகே தரையிறக்க வேண்டிய நேரத்தில் விமானம், மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஏரியில் விழுந்து மூழ்க துவங்கியது.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றவர்களையும் மீட்கும் பணி துரிதகதியில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement