75 ஆவது சுதந்திர தினத்தன்று:திரையரங்குகள் உள்ளிட்டவற்றிற்கு 50% கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகள்

75 ஆவது சுதந்திர தினத்தன்று, தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்களை 50% கட்டண கழிவில் பார்வையிடுவதற்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில், இதற்காக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:

01.    75 ஆவது சுதந்திர தினத்தன்று கட்டண அறவீடுகளின்றி தேசிய பூங்காக்கள்பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்களை பார்வையிடுவதற்கு மற்றும் திரைப்படங்களை பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கல்

75 ஆவது சுதந்திர தினமான 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள்/இடங்களை இலவசமாகப் பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கும், அன்றைய தினம் நாடளாவிய ரீதியிலுள்ள திரையரங்குகளில் நுழைவுச்சீட்டுக் கட்டணத்தின் 50% வீதக் கழிவுடன் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.