ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை மாலைதீவு உப ஜனாதிபதி சந்தித்தார்

மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நசீம் (Faisal Naseem) நேற்று (02) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத் துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்தர சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறு மாலைதீவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இலங்கையுடன் கைகோர்க்குமாறு மாலைதீவுக்கு ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், போதைப்பொருளுக்கு எதிராகப் போராடுவதற்கு மாலைதீவின் உதவியை வேண்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.