நாளை இடம்பெறும்உத்துவப் முழுநோன்மதி தினத்திற்கு அமைவாக பௌத்த சம்பிரதாயங்களுக்கு அமைவான யாத்திரை சம்பிரதாய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கமைவாக பெல்மடுல, கல்பொத்தாவல, சிறிபாத ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள புனிதப்பொருள், சமன்தேவ உருவச்சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் நான்கு பாதைகள் ஊடாக சிவனொளிபாத மலைக்கு இன்று எடுத்துச் செல்லப்படும்.
குருவிற்ற எரந்த பாதை, இரத்தினபுரி பலாபத்தல பாதை, பலாங்கொட பாதை, ஹட்டன் நல்லதண்ணி பாதை ஆகிய வழிகள் ஊடாக இவை எடுத்துச் செல்லப்படும்.
இன்று மாலை சிவனொளிபாத மலை வரை எடுத்துச் செல்லப்படும் இந்த புனித பொருட்கள் நாளை அதிகாலை சிவனொளிபாத மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும்.