பெரு நாட்டின் அதிபர் டினா பொலுவார்ட் பதவி விலகக்கோரி போராட்டம்.. சாலைப்போக்குவரத்து முடங்கியதால் படகு மூலம் ஆற்றை கடக்கும் மக்கள்..!

பெரு நாட்டின் அதிபர் டினா பொலுவார்ட் பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் பெரு-பொலிவியா எல்லையில் போக்குவரத்தை முடக்கினர்.

இதனால் வாகனங்கள் மற்றும் சரக்கு லாரிகள் சாலையில் நீண்ட வரிசையில் நிற்கின்றன. பொதுமக்களில் சிலர் படகுகள் மூலம் ஆற்றைக் கடந்து வருகின்றனர்.

முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், முக்கியச் சாலைகள் மற்றும் விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.