டெல்லி : தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 8.30 அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து, சுமார் 320 கிலோமீட்டர் அளவில் தென்கிழக்கு மேற்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையை நகர்ந்து இன்றும் மதியம் இலங்கை கடற்கரை திரிகோணமலைக்கு தெற்கே கடந்து, தென்மேற்கு, மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனைத்து இடங்களில் உள்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யகூடும் என்று கூறியுள்ளனர்.
மேலும் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.