
திருப்பதி கோயிலில் நள்ளிரவில் 12 மணியளவில் புத்தாண்டையொட்டி கோயில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள், ‘ஹேப்பி நியூ இயர்’ என புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோஷமிட்டனர்.
பின்னர் கோயில் கோபுரத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பித்து இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
சரியாக நள்ளிரவு 11.55 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் மூலவர் சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.