நீதிபதிகள் நியமன விவகாரம் யாரும், யாரையும் எச்சரிக்க முடியாது: அமைச்சர் பதில்

பிரயாக்ராஜ்: நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்த நிலையில் யாரும், யாருக்கும் எச்சரிக்கை கொடுக்க முடியாது என்று ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்துள்ளார். உபி மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த விழாவில் பங்கேற்று பேசிய ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பொதுமக்கள் தான் இந்த நாட்டின்  எஜமானர்கள். நாங்கள் வேலைக்காரர்கள்.

நாம் அனைவரும் சேவைக்காகத்தான் இங்கு வந்து இருக்கிறோம். அரசியலமைப்புதான் எங்கள் வழிகாட்டி. நமது நாடு அரசியலமைப்பு மற்றும் பொதுமக்களின் விருப்பத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஆளப்படும். எனவே யாரும் யாருக்கும் எச்சரிக்கை கொடுக்க முடியாது. பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் எதையும் பேசுவதற்கு முன், அது நாட்டுக்கு நன்மை தருமா, இல்லையா என்பதை யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.