அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்: சில கல்லூரிகளுக்கு நிறுத்தி வைப்பு – என்ன காரணம்?

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுரிகளின் 3, 5, 7 செமஸ்டர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது.

இதில் குறிப்பிட்ட சில கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.

எந்தெந்த கல்லூரிகளின் முடிவுகள் எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

1.விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்து கொள்ளாத தனியார் பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2.மேலும் விடைத்தாள் திருத்த வழங்கப்படும் நிதி குறித்த கணக்குகளை ஒப்படைக்காத கல்வி நிறுவனங்களின் தேர்வு முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

3.மாணவர்களிடம் வசூலித்த தேர்வு கட்டணத்தை அண்ணா பல்கலைக் கழகத்தில் செலுத்தாத பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று காரணங்களின் அடிப்படையில் சில பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.