சீமான்: திராவிட மாடல் இத்துபோனது தான்.. ஆளுநர் கரெக்டா தான் சொல்லி இருக்காரு.!

திராவிட மாடல் குறித்து ஆளுநர் பேசியதில் தவறில்லை என

தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ரவி ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டிதான் இன்றளவும் பேசு பொருளாக உள்ளது. ‘‘திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியாகிவிட்டது. அதை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கொள்கைக்கு எதிரானது தான் திராவிட மாடல். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஆளுநர் மாளிகையின் செலவு விவரங்கள் குறித்த அமைச்சரின் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது’’ என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புக் குரல் எழுந்தன.

அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் விசிக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். சமூக வலைதளங்களிலும் திராவிட ஆதரவாளார்கள் களமாடி வருகின்றனர்.

இந்த ஆளுநர் பேசியதில் என்ன தவறு.? என் நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 12 மணி நேர வேலை மசோதா, இஸ்லாமியர்களுக்கு எதிரான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிட அனுமதி உள்ளிட்ட விவகாரங்களில் திமுக கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சனமும் முக்கியத்துவம் பெறுகிறது.

திராவிட கொள்கைகளின் தந்தை எனப் போற்றப்படும் பண்டிதர் அயோத்திதாசரின் 109வது நினைவு நாளை முன்னிட்டு, தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திலுள்ள அவரது சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘தமிழர்களின் பெருமையும் தனிச் சிறப்பும் திராவிட ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது. கடற்கரையில் சமாதி கட்டுவது, பேனா சிலை வைப்பது, பள்ளிக்கூடங்களை சீரமைக்க மக்களிடம் கையேந்துவது இதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் என்பது ஒரு இத்துப்போன மாடல் தான். ஆளுநர்ர் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.

இஸ்லாமியர்களின் பாதுகாவலன் எனக் கூறிக்கொண்டே, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பும் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட அனுமதி அளிப்பது தான் திராவிட மாடல். கேரள ஸ்டோரி படத்தை தமிழகத்தில் வெளியிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

12 மணி நேர வேலை மசோதாவை அவசர அவசரமாக திமுக கொண்டு வந்ததன் காரணம் என்ன? பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் இந்த திட்டம் கொண்டு வரப்படவில்லை. வெளியில் எதிர்ப்பை பேசிக் கொண்டே, மறைவில் பாஜகவை வளர்த்துகிறது திமுக. எச்.ராஜா, லட்சுமணன் போன்றவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பி, தமிழகத்தில் ஒன்றுமே இல்லாத பாஜகவை ஒற்றுமையாக்கியது திமுக தான்’’ என்று அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.