சிதம்பரம்: “அரசு பேருந்திலே போலி டிக்கெட் கொடுத்து தனியாக கல்லா கட்டி வந்த கண்டக்டரை, போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி கைது செய்தனர். சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் முறையான கலெக்ஷன் வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ஆனால், பேருந்தில் பயணிகள் கூட்டம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இதை கண்காணித்து வந்த அதிகாரிகள், இந்த ஏசி பேருந்து கிராமம் கிராமமாக நின்று செல்வதை அறிந்தனர். […]