வடகொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மாஸ்கோ,

2019-ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனை தடுக்க ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தின. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி வடகொரியாவும் தனது நாட்டின் எல்லைகளை கடந்த 2020-ம் ஆண்டு மூடியது. இதனால் சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வடகொரியாவும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு செய்தது. அதன்படி தனது நட்பு நாடான ரஷியாவுக்கு முதன்முதலில் அனுமதி வழங்கப்படுவதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தனது அண்டை நாடான சீனாவுக்கு முதலில் அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் ரஷியாவுக்கு அனுமதி அளித்திருப்பது உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.