மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் அரசாங்க அதிபரிடம் மகஜர் சமர்ப்பித்தனர்.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையில் அத்துமீறிய விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரனிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

பண்ணையாளர்களின் கால்நடைகளை சுதந்திரமாக மேய்ச்சலில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி இன்றைய பட்டிப் பொங்கல் தினத்தினை கறுப்புப் பொங்கல் தினமாக அனுஷ்டித்து ஆர்ப்பாட்டமொன்று காந்திப் பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

மயிலத்தமடு பெரிய மாதவணை கால்நடை கமநல அமைப்பின் தலைவர் நிமலன் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பொலிஸ் உயர் அதிகாரிகள், மதத்தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள்,எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.