ரிஷப் பந்தை திட்டி தீர்த்த அஸ்வின்! என்ன நடந்தது? முழு விவரம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் திக்வேஸ் ரதி மன்கட் முறையில் ஜிதேஷ் சர்மாவை அவுட் செய்தது ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பந்த் இந்த முடிவை திரும்ப பெறுவதாக நடுவர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அஸ்வின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கேப்டன் ரிஷப் பந்த் செய்தது தவறு என்றும், அப்படி செய்தால் பவுலரின் தன்னம்பிக்கை போய்விடும் என்றும் தெரிவித்துள்ளார். அஸ்வின் என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

மேலும் படிங்க: ஐபிஎல் 2026ல் சிஎஸ்கே தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள்! இவர்கள் கழட்டி விடப்படுவார்கள்!

லக்னோ அணி ஏற்கனவே பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில் இதில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறலாம். இதன் மூலம் முதல் குவாலிபயரில் தோல்வியுற்றாலும் மீண்டும் விளையாட ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 228 ரன்கள் இலக்காக கொடுத்தது. இதனை எதிர்த்து ஆடிய ஆர்சிபி சிறப்பாக பேட்டிங் செய்தது. 19 பந்துகளில் 29 ரன்கள் அடித்தால் ஆர்சிபி வெற்றி என்ற நிலையில் இருந்தது. ஜிதேஷ் சர்மா ஒருபுறம் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது விக்கெட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் லக்னோ இருந்தது. 

இந்நிலையில் திக்வேஸ் ரதி பந்து வீச ஓடிவந்த போது ஜிதேஷ் சர்மா கிரீசை விட்டு வெளியேறினார். இதனால் உடனடியாக மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார் திக்வேஸ். பின்னர் மூன்றாம் நடுவரிடம் ரிவியூவிற்காக சென்றது, ஆனால் உடனடியாக ரிஷப் பந்த் நடுவரிடம் சென்று இந்த அவுட் முடிவை திரும்ப பெறுவதாக கேட்டுக்கொண்டார். ரிஷப் பந்தின் இந்த செயலுக்கு ஆர்சிபி வீரர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். இருப்பினும் மூன்றாவது நடுவர் செக் செய்தபோது நாட் அவுட் என்ற முடிவு வந்தது. இந்நிலையில் இதற்கு அஸ்வின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

“ரிஷப் பந்த் மன்கட் முறையில் திக்வேஸ் ரதி அவுட் செய்ததை திரும்ப பெற்றிருக்கக் கூடாது. இதனால் பவுலர் கூனி குறுகி போயிருப்பார். இனி வருங்காலத்தில் மன்கட் முறையில் அவுட் செய்ய அவருக்கு மனம் வராது. விதிகளின் படியே ரதி அவ்வாறு செய்துள்ளார். இங்கு அவுட் ஆனாரா இல்லையா என்பது விஷயம் இல்லை. கேப்டன் அந்த முடிவை திரும்பப்பெற்றது தவறு. விதிப்படி மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்று கூறி உள்ளார். ஆனால் அதற்கு முன்பு கேப்டன் தன்னுடைய வீரர்களுக்கு தான் சாதகமாக இருக்க வேண்டும்” என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிங்க: ஐபிஎல் லீக் ஆட்டங்களில் சதம் அடித்த வீரர்களின் பட்டியல்!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.