பழனிசாமியுடன் பாஜக துணை தலைவர் திடீர் சந்திப்பு: முருக பக்தர் மாநாட்டுக்கு அழைத்ததாக தகவல்

சேலம்: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை சேலத்​தில் பாஜக மாநிலத் துணைத் தலை​வர் கே.பி.​ராமலிங்​கம் நேற்று சந்​தித்​துப் பேசி​னார்.

சேலம் நெடுஞ்​சாலை நகரில் உள்ள பழனி​சாமி​யின் இல்​லத்​துக்​குச் சென்ற பாஜக மாநிலத் துணைத் தலை​வர் கே.பி.​ராமலிங்​கம், அவருடன் பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து பேசி​னார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் ராமலிங்​கம் கூறிய​தாவது: தமிழகத்​தில் ‘நடந்​தாய் வாழி காவிரி’ திட்​டம் மூலம் காவிரி ஆற்​றில் கலக்​கக்கூடிய கிளை நதி​கள், அதே இடத்​தில் சுத்​தப்​படுத்​தப்​படும் திட்​டத்​துக்கு ரூ.11,900 கோடி மதிப்​பீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதற்கு முதல்​கட்​ட​மாக ரூ.990 கோடி நிதியை மத்​திய அரசு ஒதுக்​கீடு செய்​துள்​ளது. இந்த கோரிக்​கையை விடுத்த அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்​கு, விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில் நன்றி தெரி​விப்​ப​தற்​காக இங்கு வந்​தேன். மேலும், மதுரை முருக பக்​தர்​கள் மாநாட்​டில் பழனி​சாமி கலந்து கொள்ள வேண்​டும் என்​றும் அழைப்பு விடுத்​துள்​ளேன். தமிழகத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக பழனி​சாமி உள்​ளார். கூட்​ட​ணி​யில் எந்​தெந்த கட்​சிக்​கு, எத்​தனை சீட் என்​பதை அவர்​தான் முடிவு செய்​வார்.

வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் கடுமை​யாக உழைத்​து, பழனி​சாமியை முதல்​வ​ராக்​கியே தீரு​வோம். தமிழகத்​தில் ஆட்சி அமைக்க வேண்​டும் என எல்லா கட்​சிகளுக்​கும் ஆசை உண்​டு. அதற்​காகத்​தான் உழைக்​கிறார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.