தற்போது இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் வருண் சக்கரவர்த்தி. இவர் டிஎன்பிஎல், ஐபிஎல் மூலம் அடையாளம் காணப்பட்டார். கிரிக்கெட்தான் தனது வாழ்க்கை என முடிவு செய்வதற்கு முன்பு வரை வருன் சக்கரவர்த்தி பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார்.
ஐபிஎல் தொடரில் தனது பந்து வீச்சு தறனை வெளிப்படுத்தி தற்போது இந்திய டி20 அணியின் முக்கிய சுழற் பந்து வீச்சாளராக மாறி உள்ளார் வருண் சக்கரவர்த்தி. சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்ற வருண் சக்கரவர்த்தி முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் நடத்து யூடியூப் சேனலில் வருண் சக்கரவர்த்தி கலந்து கொண்டு பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் பேசிய அவர், நான் கல்லூரி முடித்தவுடன் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதில் முதலில் நான் பெற்ற ஊதியம் மாதத்திற்கு ரூ. 14,000. அந்த நிறுவனத்தில் இருந்து நான் வெளியே வரும்போது ரூ. 18,000 ஆகும். பின்னர் எனக்கு எதில் ஆர்வம் என தெரியாமல் இருந்தேன். ஒருநாள் இசை என்றால் மிகவும் பிடிக்கும் என நினைத்தேன். அதனால் கிட்டார் பயிற்சி மேற்கொண்டேன்.
ஆனால், கிட்டார் பயிற்சியை என்னால் ஒரு மணி நேரத்திற்கு மேல் செய்ய முடியவில்லை. அப்போதுதான் தெரிந்தது கலையை நேசிக்க வேண்டும் என்றால் அது நமக்குள் இருந்து வர வேண்டும் என்றும் மற்றவர்களை ஈர்பதற்காக அதை செய்யக்கூடாது என புரிந்தது. சரி மீண்டும் நாம் படித்த தொழிலையே செய்வோம் என சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனத்தை தொடங்கினேன். அது ஒரு வருடம் நன்றாக சென்றது.
பின்னர் வரதா புயலால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. என்னுடைய அனைத்து முதலீடும் வீணானது. அப்போது என்னுடைய வயது 25. இதையடுத்து நண்பர்களுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தபோது, சினிமா மேல் ஆசை வந்தது. நண்பர்கள் சிலர் திரைத்துறையில் இருந்தனர். அதனால் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அங்கிருந்த துணை இயக்குனர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஜீவா என்ற எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
அப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். உனக்கு கிரிக்கெட் விளையாட தொரியுமா என்று கேட்டார். நான் டென்னிஸ் பந்தில் விளையாடி இருக்கிறேன் என கூறினேன். இதையடுத்து என்ன படக்குழுவில் சேர்த்தார்கள். ஒரு நாளைக்கு சம்பளம் 600 ரூபாய். 20 நாட்கள் படப்பிடிப்பு இருந்தது. அந்த சம்பளம் போதுமானதாக இருந்தது. இப்போது ஒரு நாளுக்கு 42 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்குகிறேன். ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் சம்பளமாக தருகிறார்கள் என கூறினார்.
மேலும் படிங்க: இங்கிலாந்து தொடரில் தோற்றாலும் கம்பீர் மாற்றப்பட மாட்டார்! காரணம் இதுதான்!
மேலும் படிங்க: கடைசி நேரத்தில் இணைந்த 2 பவுலர்கள்? இந்திய அணியில் அதிரடி மாற்றம்!