எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து 9 பேர் பரிதாப உயிரிழப்பு – நடந்தது என்ன?

திருவள்ளூர்: மீஞ்​சூர் அருகே எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​து, வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயி​ரிழந்த சம்​பவம், பொது​மக்​கள் மத்​தி​யில் கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திரு​வள்​ளூர் மாவட்​டம், வாயலூரில் இரு 660 மெகா வாட் திறனுடைய எண்​ணூர் சிறப்பு பொருளா​தார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்​டு​மானப் பணி​கள் சமீப கால​மாக நடை​பெற்று வரு​கிறது.

பாரதமிகு நிறு​வனம் சார்​பில் நடை​பெற்று வரும் இந்த கட்​டு​மான பணி​யில், 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடு​பட்டு வரு​கின்​றனர். கட்​டு​மான பணி​யில் தற்​போது, சுமார் 70 சதவீத பணி​கள் முடிவடைந்​த​தாக கூறப்படுகிறது.

இந்​நிலை​யில், எண்​ணூர் சிறப்பு பொருளா​தார மண்டல மிக உய்ய அனல் மின் நிலைய கட்​டு​மான பணி​யில், அனல்​மின் நிலைய முகப்பு பகுதி அமைக்​கும் பணி​யில் நேற்று மாலை சுமார் 30-க்​கும் மேற்​பட்ட வடமாநில தொழிலா​ளர்​கள் ஈடு​பட்டு வந்​துள்​ளனர். அப்​போது, திடீரென இரும்பு கம்​பிகளால் ஆன முகப்பு பகு​தி​யில் உள்ள சாரம் சரிந்து விழுந்​தது.

இதில், படு​காயமடைந்த பலரில் 5 பேர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். மற்​றவர்​கள் சிகிச்​சைக்​காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு ஆம்​புலன்ஸ் மூலம் கொண்டு செல்​லப்​பட்​டனர். அங்கு 4 தொழிலா​ளர்​கள் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தனர். மேலும் சிலர் ஆபத்​தான நிலை​யில் தீவிர சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

இந்த விபத்​துக்​குறித்து தகவலறிந்த மாவட்ட வரு​வாய்த் துறை அதி​காரி​கள், ஆவடி காவல் ஆணை​யரக அதி​காரி​கள், தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி​கள் துறை​யினர் சம்பவ இடம் விரைந்​து, மீட்பு பணி​களில் ஈடு​பட்​டனர். அது​மட்​டுமல்​லாமல், விபத்து குறித்து தீவிர ஆய்வு செய்​தனர். இது குறித்து தகவலறிந்த தமிழ்​நாடு மின்​சார வாரிய தலை​வர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு விரைந்​து, தொழிலா​ளர்​களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்​டறிந்​தார்.

நிவாரணம் அறிவிப்பு: இதனிடையே விபத்​தில் உயி​ரிழந்த தொழிலா​ளர்​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ. 10 லட்​சம் நிவாரணம் அறி​வித்​துள்​ளார் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின். மேலும் மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களுக்​காக அமைச்​சர் சிவசங்​கரை அனுப்பியுள்ள​தாக​வும் முதல்​வர் தெரி​வித்​துள்​ளார். இதே​போல் பிரதமர் மோடி​யும் தொழிலா​ளர் குடும்​பங்​களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50 ஆயிர​மும் நிவாரணம் அறி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.