மதுரை: திமுகவின் பி டீம் ஆக செயல்பட்ட சில அதிமுக துரோகிகளால்தான் கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது என அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். தேவர் திருமகன் குருபூஜைக்கு ஒன்றாக சென்ற, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன், மற்றும் எடப்பாடி மீதான அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் ஆகியோர், எடப்பாடியை நீக்கும் வரை ஓயமாட்டோம் என சூளுரைத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. […]