வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நிறுத்தாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நிறுத்​தா​விட்​டால் தமிழக அரசி​யல் கட்சிகள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்தில் வழக்கு தொடரப்​படும் என்று முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நடந்த அனைத்​துக் கட்சி கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

வாக்​காளர் பட்​டியலில் தகு​தி​யானவர்​கள் அனை​வரை​யும் விடு​ப​டா​மல் சேர்ப்​பது, உயி​ரிழந்​தவர்​கள், இடம்​பெயர்ந்​தவர்​கள், இரட்​டைப் பதிவு கொண்​ட​வர்​களின் பெயர்​களை கண்​டறிந்து நீக்​கு​வது ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்டு இந்​தி​யா​வில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

சுமார் 21 ஆண்​டு​களுக்​குப் பிறகு, சமீபத்​தில் பிஹாரில் இப்​பணி நடை​பெற்​றது. விரை​வில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​ நடை​பெற உள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்​கம் உள்​ளிட்ட 12 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் எஸ்​ஐஆர் பணி கடந்த 28-ம் தேதி தொடங்​கி​யுள்​ளது. இதுதொடர்​பாக அலு​வலர்​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், வீடு வீடாக ஆய்வு செய்யும் பணி நாளை (நவ.4) தொடங்க உள்​ளது.

திமுக மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சிகள் இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இந்​நிலை​யில், இதில் அடுத்​தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோ​சிக்​கும் வகை​யில், திமுக சார்​பில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் அனைத்​துக் கட்சி கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் காங்​கிரஸ், விசிக, மதி​முக உட்பட 49 கட்​சிகள் பங்​கேற்​றன.

கூட்​டத்​தில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்​மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம்: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்கு (எஸ்​ஐஆர்) நாட்​டின் பல்​வேறு கட்​சிகள் தொடக்​கம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. மத்​திய அரசின் கைப்​பாவை​யாக, எதேச்​ச​தி​காரப் போக்​குடன் தேர்​தல் ஆணை​யம் செயல்​படு​வதை இந்த கூட்​டம் கண்​டிக்​கிறது.

சிறுபான்மையினர் வாக்குகள்: சிறு​பான்​மை​யினரின் வாக்​கு​கள், பாஜக​வின் எதிர்ப்பு வாக்​கு​கள் ஆகிய​வற்றை குறி​வைத்து நீக்​கும் நோக்​கோடு, தகு​தி​யுள்ள வாக்​காளர்​களை நீக்​கி, தகு​தி​யற்ற வாக்​காளர்​களை சேர்க்​கும்சதித் திட்​டத்தோடு பிஹாரில் இந்த நடவடிக்கை மேற்​கொள்​ளப்பட்​டுள்​ளது. இதுகுறித்து மக்கள் மன்​றத்துக்​கோ, உச்ச நீதி​மன்​றத்​துக்கோ தேர்தல் ஆணையம் எந்த பதிலும் கூற​வில்​லை.

பிஹாரில் நடந்த குளறு​படிகளை சரிசெய்யாமல் தமிழகம் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் எஸ்​ஐஆர் திட்​டத்தை செயல்​படுத்​து​வது மக்​களின் வாக்​குரிமையை பறிப்​ப​தாக​வும், ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டி புதைப்​ப​தாக​வும் உள்​ளது. பிஹாரில் நடந்த எஸ்​ஐஆர் பணி தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருக்​கும்​போது, தமிழகத்​தில் இந்த பணியை தேர்​தல் ஆணை​யம் தொடங்​கியதை ஏற்க முடி​யாது.

மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டம் 1951 பிரிவு 169-ன்​படி மத்​திய அரசிதழில் முறைப்​படி அறி​விப்பு வெளி​யிட்​டு, அதன் மூலமாகவே வாக்​காளர் பட்​டியல் திருத்தம் செய்​யப்பட வேண்​டும். மாறாக,தேர்​தல் ஆணை​யமே தன்​னிச்​சையாக அறிவிப்பது, அரசியல் சட்​டம், மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டத்​துக்​கு எதி​ரானது. தேர்​தல் ஆணை​யத்​தின் வாக்​காளர் சரி​பார்ப்​பில் நேர்​மை, வெளிப்​படைத்​தன்மை இல்​லை. ‘ஆதார் சில நிபந்​தனை​களு​டன் அடை​யாள​மாக ஏற்​றுக்​கொள்​ளப்​படும்’ என்கிறது ஆணை​யம். இதன்​மூலம், உண்​மை​யான வாக்காளர்​களின் பெயர்களை பட்​டியலில் இருந்து நீக்க திட்​ட​மிடு​வதாக தெரி​கிறது. ஒரு வாக்​காளர் ஆவணம் வழங்க வேண்​டுமா, வேண்​டா​மா? யாரிடம் வழங்​கு​வது? என்ற எந்த அடிப்​படை கேள்வி​களுக்​கு பதில் இல்லை.

சரியான காலம் அல்ல: கணக்​கெடுப்பு காலம் என நிச்​ச​யிக்​கப்​பட்​டுள்ள நவ.4 முதல் டிச.4 வரையி​லான காலம் தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை​யின் உச்ச காலம். எனவே, பெரும் எண்​ணிக்​கை​யில் வாக்​காளர்​கள் நீக்​கப்​படு​வார்​கள் என்ற அச்​சம் உள்​ளது. வரு​வாய்த் துறை​யும் கனமழை​யால் எழும் சூழ்​நிலைகளை கையாள்​வ​தில் ஈடுபட வேண்​டும். எனவே, இது கணக்​கெடுப்​புக்கு உகந்த காலம் இல்​லை.

வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​படு​வதற்கு முன்பு உள்ள கால​கட்​டத்​தில் கிறிஸ்​து​மஸ், பொங்​கல் திரு​நாள் உள்​ளன. இதனால், வாக்​காளர் பட்​டியல் தயாரிப்பு பணி​யில் விடு​படும் வாக்​காளர்​களோ, சேர விரும்​பும் வாக்​காளர்​களோ மிகுந்த சிரமத்​துக்கு உள்​ளாகி தங்​களது வாக்​குரிமையை இழக்​கும் நிலை ஏற்​படும். எனவே, தமிழகத்​தில் எஸ்​ஐஆர் பணியை மேற்​கொள்​வது ஏற்​கக்​கூடியது அல்ல. இதை தேர்​தல் ஆணை​யம் இப்​போது கைவிட வேண்​டும். ஆணைய அறி​விப்​பில் உள்ள குறைகள் களை​யப்​பட்​டு, உச்ச நீதி​மன்றவழி​காட்​டு​தலை வெளிப்படை​யாக கடைபிடித்து, உரிய அவகாசம் தந்​து, 2026 சட்​டப்​பேரவை தேர்​தலுக்​குப் பிறகு, எந்த கட்​சிக்​கும் சார்​பற்ற நிலை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தத்தை தேர்​தல் ஆணை​யம் நடத்த வேண்​டும்.

தேர்​தல் ஆணை​யம் இந்த கருத்​துகளை ஏற்​காத​தால், தமிழகத்​தில் வாக்​காளர்​கள் அனை​வரது வாக்​குரிமை​யை​யும் நிலை​நாட்ட உச்ச நீதி​மன்​றத்தை நாடு​வதைத் தவிர வேறு வழி​இல்லை. தேர்​தல் ஜனநாயகத்தை காப்​பாற்ற தமிழகத்​தில்உள்ள அரசி​யல் கட்​சிகள் சார்​பில்உச்​ச நீதி​மன்​றத்​தில்​ மனு தாக்​கல்​ செய்​யப்​படும். இவ்வாறுதீர்​மானம்​ நிறைவேற்​றப்​பட்​டது.

பங்கேற்றது 49; புறக்கணிப்பு 11: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திமுக சார்பில் 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.திமுக நிர்வாகிகள் குழுவினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இல்லாத தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றன. திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கி.வீரமணி (திராவிடர் கழகம்), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), திருமாவளவன் (விசிக), மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்), பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட்), கமல்ஹாசன் (மநீம), காதர் மொகிதீன் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), ஜவாஹிருல்லா (மமக), தமிமுன் அன்சாரி (மஜக), பார்த்தசாரதி (தேமுதிக), வசீகரன் (ஆம்ஆத்மி),கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) உட்பட 49 கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக மற்றும் பாமகவில் அன்புமணி தரப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை. தவெக, நாதக, ராமதாஸ் தரப்பு பாமக உள்ளிட்ட 11 கட்சிகளை அழைத்தும் பங்கேற்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.