BB Tamil 9: "மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது" – பார்வதியிடம் கோபப்படும் திவாகர்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

இதனைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. பார்வதி, சபரி, திவ்யா கணேஷ் போட்டியிட்ட நிலையில் சபரி டாஸ்க்கில் வெற்றி பெற்று இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடந்த மாதிரி இந்த வாரம் ராஜா – ராணி டாஸ்க் நடக்கிறது. இதில் கானா தேசத்திற்கு வினோத்தும் – தர்பீஸ் தேசத்திற்கு திவாகரும் அரசர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில், கானா தேசத்திற்கு விக்கல்ஸ் விக்ரம் அரசராகவும், தர்பீஸ் தேசத்திற்கு பார்வதி அரசியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

BB Tamil 9
BB Tamil 9

“ஒரு பெண்ணை அவமதிப்பது தவறுதான்” என பார்வதி அரோராவிடம் திவாகரை மன்னிப்பு கேட்க சொல்ல திவாகர் “மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது.

அந்தப் பொண்ணுதான் என்னைய உருவக்கேலி பண்ணுச்சு. கனி அக்கா குரூப்பிசத்தைத் தூண்டிவிடுறாங்க. அவங்க பொறாமைப்படுறது நல்லாவே தெரியுது” என கோபப்பட்டு கத்துகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.