விஷு பண்டிகையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவனந்தபுரம்,  கேரளாவில் விஷு பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் விஷு கனி தரிசனம் நடந்தது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. விஷூ கனி தரிசனம் காண சபரிமலையில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை 4.25 மணி முதல் 7 மணி வரை கனி காணல் சடங்கு நடந்தது. தொடர்ந்து கோவில் தந்திரி கண்டரரு … Read more

ஐபிஎல் : ஹைதராபாத் அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா அணி

மும்பை, இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் ,வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சுனில் நரைன் 6 … Read more

அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி 2 பேர் சாவு 200 வீடுகள் எரிந்து நாசம்

நியூயார்க்,  அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணத்தில் உள்ள மலை கிராமமான ருயிடோசோவில் கடந்த செவ்வாய்கிழமை முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த காட்டுத்தீ ருயிடோசோவில் உள்ள குடியிருப்பு பகுதிகளை களேபரம் செய்து வருகிறது. காட்டுத்தீயில் சிக்கி 200-க்கும் அதிகமான வீடுகள் எரிந்து சாம்பலாகின. அதில் ஒரு … Read more

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக பாஜக செயற்குழு கூட்டம் – தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்..!

விஜயநகர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக பாஜக மாநில செயற்குழு கூட்டம் ஒசப்பேட்டேவில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார். மந்திரி மீது 40 சதவீதம் புகார் கூறிய காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு ஈசுவரப்பாவே காரணம் என்று அவர் ‘வாட்ஸ்-அப்’ மற்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஈசுவரப்பா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி … Read more

ஐபிஎல் : ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிதிஷ் ராணா அரைசதம்

மும்பை, இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக களமிறங்கிய  ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் ,வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சுனில் நரைன் 6 … Read more

விலை உயர்ந்த பரிசு பொருட்களை விற்றுவிட்டார் இம்ரான்கான் மீது ஷபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்,  பாகிஸ்தானில் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது புதிதாக வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இம்ரான்கான் மீது புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதாவது, இம்ரான்கான் ஆட்சியில் இருந்தபோது பரிசாக கிடைத்த வைர நகைகள், பிரேஸ்லெட்டுகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை துபாயில் ரூ.14 கோடிக்கு விற்று விட்டதாக ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார். அரசு கஜானாவில் இருந்து இந்த பொருட்களை எடுத்து விற்றுள்ளதாக தெரிவித்த ஷபாஸ் ஷெரீப், … Read more

உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்..!

புதுடெல்லி, மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ஜவுளித்துறையில் முதலீடு செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து 67 பரிந்துரை கடிதங்கள் மத்திய அரசுக்கு வந்தன. இதில் கின்னி பிலமென்ட்ஸ், கிம்பர்லி கிலார்க் இந்தியா லிட்., அர்விந்த் லிட். உள்ளிட்ட கம்பெனிகளின் 61 பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய அரசு அங்கீகரித்த இந்த 61 பரிந்துரைகளில், விண்ணப்பதாரர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் உத்தேச மொத்த முதலீடு ரூ.19,077 கோடி என மத்திய ஜவுளித்துறை செயலாளர் … Read more

ஐபிஎல் 2022 : புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்திற்கு முன்னேற்றம் ..!

15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது .இந்த வெற்றியால் குஜராத் அணி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில்  உள்ளது . கொல்கத்தா அணி  2வது இடத்திலும் ,ராஜஸ்தான் அணி 3 வது இடத்திலும் ,பஞ்சாப் அணி 4வது இடத்திலும் … Read more

அகிம்சை, உண்மை மற்றும் இரக்கம் ஆகிய மகாவீரரின் வழிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்; பைடன் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி பைடன் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜெயின் மத நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் மக்களுக்கு மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நானும், ஜில்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். நாம் அனைவரும் உண்மையை தேடியும், வன்முறையில் இருந்து விலகியும், ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடன் வாழும் மகாவீர் சுவாமி காட்டிய வழிமுறையை பின்பற்றுவோம் என்று தெரிவித்து உள்ளார். ஜெயின் மதத்தில் கடைசி தீர்த்தங்கரராக … Read more

2021-22-ம் நிதியாண்டில் சேவை ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடியாக உயர்வு மத்திய மந்திரி பெருமிதம்

புதுடெல்லி,  நாட்டில் கொரோனா காரணமாக பயணம், சுற்றுலா, விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தபோதும், சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதியில் இந்தியா மைல்கல் சாதனை படைத்திருப்பதாக மத்திய வர்த்தக மந்திரி பியூஸ்கோயல் பெருமிதத்துடன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 31-ந்தேதியுடன் நிறைவடைந்த 2021-22-ம் நிதியாண்டில் நாட்டின் சேவை ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவாக 250 பில்லியன் டாலராக (சுமார் ரூ.18.75 லட்சம் கோடி) அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார். இதைப்போல சரக்கு ஏற்றுமதியும் 400 … Read more