பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உறுதி

பாட்னா: பிஹாரில் குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கப்​படும் என மெகா கூட்​டணி தேர்​தல் அறிக்​கை​யில் கூறப்பட்டுள்​ளது. பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் வரும் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் முடிவடைகிறது. இதையொட்டி, 243 உறுப்​பினர்​களைக் கொண்ட சட்​டப்​பேர​வைக்கு வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெறும் என்றும் 16-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் என்​றும் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. இந்​தத் தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக உள்​ளிட்ட … Read more

வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தில் பல லட்சம் வாக்காளர் நீக்கப்பட வாய்ப்பு: மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

விருதுநகர்: வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார். விருதுநகரில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கில் மாணிக்கம் தாகூர் எம்.பி. இன்று ஆய்வு மேற்காண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், விருதுநகரில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கு 1961-ல் தொடங்கப்பட்டது. சுமார் 5.5 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 21,254 மெட்ரிக் டன் அரிசி சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இங்கு ரேசன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் அரசி … Read more

அரசுப் பள்ளிகளில் தேசிய கீதம் பாடாவிட்டால் சம்பளம் குறைப்பு

ஜெய்ப்பூர்: ​ராஜஸ்​தான் அமைச்​சர் மதன் திலா​வர் நேற்று முன்​தினம் கூறிய​தாவது: ராஜஸ்​தானில் கல்​வி, சம்​ஸ்​கிருத கல்வி மற்றும் பஞ்​சா​யத்து ராஜ் துறை​களின் கீழ் வரும் அனைத்து பள்​ளி​கள் மற்​றும் அலு​வல​கங்​களில் தின​மும் காலை​யில் தேசிய கீதமும் மாலை​யில் தேசிய பாடலும் பாடு​வது கட்​டாய​மாக்​கப்பட உள்​ளது. இதில் பங்​கேற்​கும் ஆசிரியர்​கள், ஊழியர்​களுக்கு மட்​டுமே வரு​கைப் பதிவு தரப்​படும். வரு​கைப் பதிவு இல்​லாதவர்​கள் சம்​பளக் குறைப்பை எதிர்​கொள்ள நேரிடும். ஆசிரியர்​கள், ஊழியர்​கள் மற்​றும் மாணவர்​கள் இடையே தேசி​ய​வாத சிந்​தனையை ஊக்​கு​விப்​பதே … Read more

விளையாட்டை வாழ்க்கை மேம்பாட்டுக்காக மாற்ற வேண்டும்: அன்பில் மகேஸ் அறிவுரை

தஞ்சாவூர்: விளையாட்டை வெறும் விளையாட்டுதான் என கருதாமல், அதையும் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மாற்ற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான 66வது குடியரசு தின தடகள போட்டியின் தொடக்க விழா இன்று (அக்.29) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். எம்.பி. க்கள் கல்யாண சுந்தரம், முரசொலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். … Read more

டெல்லியில் விமானம் அருகில் தீப்பற்றிய பேருந்து

புதுடெல்லி: டெல்லி விமான நிலை​யத்​தில் ஏர் இந்​தியா விமானம் அரு​கில் நிறுத்​தப்​பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்​பற்றி எரிந்​த​தால் பரபரப்பு உரு​வானது. டெல்​லி​யில் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் உள்​ளது. இங்கு விமான நிறு​வனங்​களுக்கு ‘சாட்ஸ் ஏர்​போர்ட் சர்​வீசஸ்’ என்ற நிறு​வனம் பேருந்து சேவை வழங்கி வரு​கிறது. இதற்கு சொந்​த​மான ஒரு பேருந்து நேற்று பிற்​பகல் மூன்​றாவது முனை​யத்​தில் ஏர் இந்​தியா விமானத்​துக்கு அரு​கில் நின்​றிருந்​தது. இந்​நிலை​யில் அந்​தப் பேருந்து திடீரென தீப்​பற்றி எரிந்​த​தால் பரபரப்பு … Read more

நவ.5-ல் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்: விஜய் அறிவிப்பு

சென்னை: நவம்பர் 5 ஆம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது. சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் ‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்’ அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது. … Read more

போயிங், ஏர்பஸ் ஏகபோகத்துக்கு சவால்: பயணிகள் விமானம் தயாரிக்கும் எச்ஏஎல்

புதுடெல்லி: உலகள​வில் பயணி​கள் விமான தயாரிப்​பில் ஏர்​பஸ் மற்​றும் போ​யிங் நிறு​வனங்​கள் ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றன. இந்​தி​யா​விடம் அனைத்து வளங்​கள் இருந்​தா​லும் பல்​வேறு இடையூறுகள் காரண​மாக நீண்ட கால​மாக பயணி​கள் விமான தயாரிப்பை மேற்​கொள்ள முடி​யாத சூழல் நிலவி வந்​தது. ஆனால், இப்​போது, ரஷ்யா மற்​றும் சீனா​வுக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யா​வும் உள்​நாட்​டில் பயணி​கள் விமான தயாரிப்பை சாத்​தி​ய​மாக்க உள்​ளது. இதற்​காக, ரஷ்​யா​வைச் சேர்ந்த பொது கூட்டு பங்கு நிறு​வன​மான யுனைடெட் ஏர்​கி​ராப்ட் கார்ப்​பரேஷன் (பிஜேஎஸ்​சி-​யுஏசி) உடன் ஹிந்​துஸ்​தான் … Read more

பள்ளிக்கரணை சதுப்பு நில குடியிருப்பு விவகாரம்: ஐகோர்ட்டில் அதிமுக பொதுநல மனு

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, சதுப்பு நிலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கவில்லை எனவும் சதுப்பு நிலத்திற்கு வெளியே தனியார் பட்டா நிலத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அரசு … Read more

கனடாவில் இந்திய பெண் கொலை: குற்றவாளியை தேடும் பணி தீவிரம்

புதுடெல்லி: பஞ்​சாப் மாநிலத்​தின் சங்​ரூர் மாவட்​டத்தைச் சேர்ந்​தவர் மன்​பிரீத் சிங் (27). இவர் கனடா​வின் டோரண்​டோ நகரில் உள்ள பிராம்ப்​டனில் கடந்த சில ஆண்​டு​களாக வசித்து வரு​கிறார். அங்கு இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த அமன்​பிரீத் சய்னி என்ற இளம்​பெண்ணை கடந்த வாரம் கொலை செய்​துள்​ளார். அமன்​பிரீத்​தின் உடலை லிங்​க​னில் உள்ள ஒரு பூங்​கா​வில் இருந்து போலீ​ஸார் கடந்த 21-ம் தேதி கைப்​பற்​றினர். அவரது உடலில் பல இடங்​களில் காயங்​கள் இருந்​ததை போலீ​ஸார் உறு​திப்​படுத்​தி​யுள்​ளனர். இதையடுத்​து, விசா​ரணைக்கு பயந்து … Read more

என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: தென்காசியில் முதல்வர் பேச்சு

தென்காசி: என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே அரசு சார்பில் ரூ.1.020 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வரவேற்று பேசினார். தொடர்ந்து, 2,44,469 பயனாளிகளுக்கு ரூ.587.39 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை … Read more