தேர்தல் முறைகேடு; வாக்கு எண்ணிக்கையை நிறுத்தகோரி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு ம.நீ.ம ஆர்ப்பாட்டம்

MNM protest in front SEC to stop vote counting: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மக்கள் நீதி மய்யம், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மனு அளித்துள்ளது. தமிழகத்தின் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மாநிலம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், … Read more

வாக்குச் சாவடியில் தகராறு…பெண் போலீசின் போனை பறித்த திமுக பிரமுகர்; பரபரப்பு வீடியோ!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று சுமூகமாக முடிவடைந்தது. வாக்கு எண்ணிக்கையானது பிப்ரவரி 22 ஆம் தேதி 268 மையங்களில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி 115வது வார்டு திமுக வேட்பாளர் ஈஸ்வரியின் கணவரும் தி.மு.க. 115-வது வட்டத்தின் வட்ட செயலாளருமான ஜி.வெங்கடேஷ் வாக்கு சாவடியில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்திலும் தகராறிலும் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. திருவல்லிக்கேணி Immaculate பள்ளியில் இருந்த வாக்குச்சாவடிக்கு வந்த வெங்கடேஷை, செல்போனுடன் வாக்குச்சாவடி … Read more

உக்ரைனில் உள்ள 1000 தமிழர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை

Intensive work to collect details of 1000 Tamil people in Ukraine: உக்ரைனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பத்திரமாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய துணை தூதரகத்திற்கு மாநிலங்களவை எம்.பி., புதுக்கோட்டை அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே போர் நடக்கலாம் என்ற பதற்றம் நீடிக்கிறது. இதனையடுத்து உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரம் … Read more

போலீஸ் துன்புறுத்தலில் இருந்து LGBTQIA+ சமூகத்தை காப்பாற்றும் தமிழக அரசின் சட்டம்

Arun Janardhanan  Explained: Tamil Nadu’s rule to protect LGBTQIA+ community from police harassment: LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்த சமூகத்தின் நலனுக்காகப் பணியாற்றும் நபர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு துணை போலீஸ் அதிகாரிகளின் நடத்தை விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்தது. திருத்தம் என்ன? மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட பிப்ரவரி 15 தேதியிட்ட உத்தரவு, நடத்தை விதிகளின் விதி 24B க்கு கீழே விதி 24C ஐ சேர்க்கிறது. கூடுதல் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவு… சென்னையில் குறைந்த வாக்குப்பதிவு; முழு விவரம்

தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. கொரோனா தொற்று பதித்தவர்கள் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை வாக்களிக்கத்தனர். 11 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்தது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வரிசையில் நின்று … Read more

Tamil News Today Live: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவு

Go to Live Updates Tamil Nadu News Updates: தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60.70 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% சதவீத வாக்குகளும், மாநகராட்சிகளில் குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. பாஜக பூத் முகவர் மேலூர் கிளைச்சிறையில் அடைப்பு வாக்குச்சாவடியில் பிரச்னை செய்த புகாரில் கைதான பாஜக பூத் முகவர் கிரி ராஜன் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மேலூர் கிளைச்சிறையில் அடைப்பு – மார்ச் 4ம் … Read more

திப்பிலி, மிளகு, மிளகாய்… தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் சூப்பர் ரசம் இதுதான்!

Thippili Rasam recipe in tamil: குளிர்காலத்தில் பயணித்து வரும் நமக்கு உடல் நிலை சரியில்லாமல் போவது வழக்கம் தான். இப்படி திடீரென ஏற்படும் நோய்களை குணப்படுத்திவதில் சிறந்தவையாக நம்முடைய அன்றாட உணவுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக ரசம் முக்கிய பங்காற்றுகிறது. ரசத்தில் பல வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு வகை நோய் தொற்றுகளை குணப்படுவதில் சிறந்ததாக இருக்கின்றன. அந்த வகையில் இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் அற்புத ரசமாக “திப்பிலி … Read more

தேர்தல் விதிமீறல்; அரவிந்த் கெஜ்ரிவால் மீது எஃப்.ஐ.ஆர் பதிய பஞ்சாப் தேர்தல் அதிகாரி உத்தரவு

Punjab elections: State CEO orders FIR against Arvind Kejriwal for poll code violation: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சனிக்கிழமை உத்தரவிட்டார். அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட வீடியோ மீது SAD துணைத் தலைவர் அர்ஷ்தீப் சிங் கிளர் … Read more

நாங்க எப்போவும் ஜாலியாதான் இருப்போம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலி குருப் வீடியோ

Pandian Stores Sujitha Viral Video : தமிழ் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது பாண்டியன் ஸ்டார்ஸ். குடும்ப உறவுகளையும் சகோதர பாசத்தையும் மைமான வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மட்டுமல்லாது இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் தனித்தயாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், … Read more

வாக்களிக்க உதயசூரியன் பொறித்த புடவை அணிந்து வந்த பெண்கள் – தடுத்து நிறுத்திய போலீஸ்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் பொதுமக்களுடன் இணைந்து ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சிவகாசியில் 26வது வார்டு பகுதி வாக்குச்சாவடிக்கு, உதயசூரியன் சின்னம் பொறிந்த புடவை அணிந்த பெண்கள் சிலர் வாக்களிக்க வந்துள்ளனர். இதை கவனித்த பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர், அவர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சிவகாசி … Read more